Wednesday, June 1, 2011

இனி இரவுகளை தொலைப்பதில் அர்த்தமில்லை:)


நான் அவனை காதலிக்கிறேன். எப்போது இருந்து காதலிக்கிறாய் என்று என்னிடம் நீங்கள் கேட்பது குழந்தையிடம் நீ எப்போது பிறந்தாய் என்பதற்கு ஒப்பானது.அவனிடம் என்ன பிடித்தது என்று கூட எனக்கு சொல்லத் தெரியவில்லை.நினைவுள்ள நாள் முதலே அவன் மட்டுமே என் கண்ணுக்கு தெரிகிறான். அவன் படிக்கும் கல்லூரியில் சேர்வதற்காக இன்ஜிரியரிங் சீட் கிடைத்தும் பி.எஸ்.சி. மேக்ஸ் சேர்ந்தேன்.ஒரே ஊராக இருந்தும்,கல்லூரியில் அவன் ஜூனியராக படித்தும் என்னுடைய காதலை மட்டும் இதுவரை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

எனக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். அவனைப் பார்த்து 6 மாத காலம் ஆகி விட்டது. அவன் தற்போது சென்னையில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறான். நாளை நடக்கவிருக்கும் பட்டமளிப்பு விழாவுக்கு வருபவனிடம் கட்டாயம் சொல்லியாக வேண்டும்.


விழா நிகழ்ச்சியின் இடையே அப்பாவிடம் வந்த போனை பேசுவதற்காக வாசற்படியை தாண்டி வெளியே வருகையில் ,"மாப்ள, ராஜியைப் பார்த்தியா.எப்படி திமிறிக்கிட்டு நிக்குது. நம்ம சாதியில இருக்கிறவளுக எல்லாம் இல்லாததை இழுத்து தூக்கி வச்சுக்கிட்டு அலையுறாளுக .நீ ஆயிரம் தான் சொல்லு,அவளுகளை மாதிரி நேச்சுரலாக யாருக்கும் இருக்காது." என்று ஒருவன் போதையில் அவனிடம் உளறிக் கொண்டு இருக்கிறான்.அதைக் கேட்டுக்கொண்டு இருக்கும் அவனிடம் ஒரு எதிர்ப்போ, ஆமோதிப்போ இல்லை.எனக்கு அங்கே அப்படியே என்னை அறுத்துக் கொண்டு சாக வேண்டும் போல இருந்தது.


இரவாகி விட்டது,எல்லாம் பசிக்கிறது. "இனி இரவுகளை அவனுக்காக தொலைப்பதில் அர்த்தமில்லை".

4 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

முல்லை அமுதன் said...

paaraaddukal

http://kaatruveli-ithazh.blogspot.com/

செம்மலர் செல்வன் said...

நன்றி,ரத்னவேல் அய்யா..

செம்மலர் செல்வன் said...

நன்றி,முல்லை அமுதன் !