Wednesday, October 1, 2008

தமிழீழம் - கருணாநிதி கூட்டம்

'ஈழத் தமிழர் பிரச்னையில் திமுக நிலையும் - மத்திய அரசுக்கு வேண்டுகோளும்' என்ற தலைப்பில், சென்னை மயிலை மாங்கொல்லையில் 6-ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்திற்கு திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான பேராசிரியர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி பேசுகிறார்,'

"இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ? "
அகண்ட பாரத நாட்டின் பிரதமரை தேர்ந்து எடுக்க கூடிய அளவுக்கு சர்வ வல்லமை கொண்ட நமது தமிழக முதல்வர் வெறுமனே இலங்கை தமிழர் பிரச்சனையில் கவிதை,கடிதம்,பேச்சு என அவர் செய்வது கலைக்கு , மொழிக்கு ஆற்றும் தொண்டாகவே கருத வேண்டி உள்ளது.. அங்க இருக்கிறவன் செத்தா என்ன , பொழச்சா என்ன ?

ஜெயலலிதா,விஜயகாந்த்,கம்யூனிஸ்ட் கட்சிகள்,பா ம க கட்சிகள் இந்த பிரச்சனைக்காக போராடுவதை குறை கூறாதீர்.. அவர்கள் அழைக்க விட்டால் என்ன.. நானும் வருவேன் என்று நீங்கள் கூறினால் அவர்கள் மறுப்பார்களா?.. நீங்கள் தனியாக ஒரு கூட்டம் கூட்டி அங்கு அழுதால் போதுமா? இங்க எல்லா மக்களுக்கும் உங்கள் நிலைப்பாடு அறியும்.. டெல்லியில் போயி கூட்டம் போடுங்கள்.. நம் நாட்டு மக்களின் கவனம் கிடைக்கும்.. சும்மா இங்க மாங்கொல்லை, கடற்கரைன்னு பேசிகிட்டு.. நளினியை பிரியங்கா வந்து பாக்கிறாங்க.. நீங்க அப்போ ஒரு எட்டு ஸ்ரீலங்கா போயி பாருங்க.. விடுதலை புலிகளை பார்த்து பேசுங்கள்.. தமிழன் ஸ்ரீலங்கா மட்டும் தான் உள்ளான் போல என என்னும் சர்வதேச சமூகத்துக்கு எட்டு கோடி மக்கள் கொண்ட மக்களாட்சி தத்துவம் கொண்ட ஒரு மாநிலத்தின் முதல்வர் அவர்கள் பொருட்டு பேசுகின்றார் என்றால் உலகம் கவனிக்கும்.. இந்த ஈழ தமிழர் பிரச்சனை தீர அவரே முன்னெடுத்து மத்தியில் உள்ள அரசுக்கும், ஈழ தமிழர்க்கும், சிங்களவருக்கும் பேச்சு வார்த்தை நடத்தலாம்.. இந்திய அரசுக்கும் , சிங்கள அரசுக்கும் பிரபாகரன் மட்டும் தான் தொல்லையா? இல்லை தமிழினமே தொல்லையா? என அறிய வேண்டிய காலம் உள்ளது.. எவ்வளோ கொடுங்கோல் செய்த மன்னர்கள் உண்டு.. பிட்றேல் காஸ்ட்ரோவையும், செகுவேரயையும் மேற்கோள் கட்டும் நீங்கள் பிரபாகரனை பத்தி சொன்னால் தான் என்ன? ஒரு சீக்கியன் இந்திரா காந்தியை கொன்றான் என்பதற்க்காக அந்த இனத்தை ஒடுக்கி வைக்க முடியுமா?

அங்குள்ள தமிழ் மக்களுக்கு உரிய தமிழீழம் அமைய நடவடிக்கை எடுங்கள்.. இல்லையென்றால் உங்களுக்கும் தினமலர்,ஹிந்து , சுப்ரமணியசாமி, சோ, கருணாவுக்கும் வித்தியாசம் இல்லை என கருத வேண்டி வரும்..