Tuesday, April 6, 2010

காதல் - கல்யாணம்

"ஏம்ப்பா, எந்திரி.மணி ஏழு ஆகப்போகுது. சீக்கிரம் கிளம்பி பள்ளிக்கூடத்துக்கு போகணும்ல." அம்மா எங்கோ தூரத்தில் இருந்து இவனை எழுப்புவது போல இருந்தது.

"இந்த பள்ளிக்கூடம்,பரீட்சை இதெல்லாம் எவன் கண்டுபிடிச்சானோ தெரியல. இந்த அப்பாவும் ஏதாவது சொத்து,கித்து சேர்த்து வச்சு இருந்தாலும் பரவாயில்லை, போஸ்ட்மேனா வேலை பார்த்து,என்னத்த சம்பாரிச்சு கொட்ட முடியும். என்னையும்,தங்கையும் படிக்க வைக்கலாம். அம்மா வீடு நல்ல வசதி தான்.ஆனா அப்பா அரசாங்க உத்தியோகம்ன்னு கட்டிக்கொடுத்து பாவம் அம்மா இங்க தனி ஆளா கஷ்டப்படுறாங்க. அவ,அதான் தங்கச்சி தினமும் திண்டுக்கலுக்கு போய் வர கஷ்டப்படுறானு ஹாஸ்டல்ல போய் சேர்த்து விட்டுட்டார். அம்மா,பாவம் துணி துவைக்க,பாத்திரம் விலக்க,சமையல் செய்ய என எந்நேரமும் நிக்க நேரம் இல்லாமல் இங்க தனி ஆளா வேலை செய்துகிட்டு இருக்காங்க"இவ்வாறு நினைத்து கொண்டே எழுந்தான்.

சரி,இன்று பிசிக்ஸ் பரிட்சை வேறு இருக்கு.பஸ்ட் ரிவிசன் தான்.படிச்சு இருந்தாத் தானே அதைப் பத்தி கவலை எல்லாம்,இதை பத்தி நினச்சுகிட்டு இருந்தா மத்த வேலை எல்லாம் யார் பார்க்கிறது.ஒரு வழியாக கிளம்பி,தோசையை சாப்பிட்டு விட்டு மத்தியானத்துக்கு அம்மா டிபன் பாக்ஸ்சில் போட்டுக் கொடுத்த புளிச்சோறை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டான்.


பஸ் ஸ்டாப்பை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தான்.ராஜாளி பஸ் திண்டுக்கலை நோக்கி விரைந்து கொண்டு இருந்தது. நல்ல மெல்லிய காற்று வீசியது.இந்த செம்பட்டி எவ்வளவு நல்ல ஊர், ஊரைச் சுற்றிலும் ஒரே பசுமை. நெல் வயல்கள், தென்னந் தோப்புகள், ஆறு,அணைக்கட்டு என முழுமையான ஊர்,.முன்னாடியும் இருந்தோமோ,குஜிலியம்பாறை என்றொரு ஊரில்,ஊரை சுற்றி பாறை.ஆனாலும் இது இவனுக்கு சொந்த ஊர் இல்லையே.


பஸ்ஸில் இருந்த பெண்கள் இவனை கை காட்டி ஏதோ கை காட்டி சிரிப்பது போல இருந்தது. இவன் அதைப் பற்றி சிறிது சலனம் கொள்ளவில்லை.ஆனால் அப்பெண்கள் அணிந்து இருந்த சுடிதாரைப் பார்த்த மாத்திரத்தில் அவள் நினைவு வந்தது.அவள் செல்ல வேண்டிய பேருந்து ஒட்டன்சத்திரத்தில் இருந்து எட்டே கால் மணிக்கு கிளம்பி விடும்.

மணி இப்போது ஏழே முக்கால் ஆகி விட்டது.மொபசல் பாஸ் ஒன்றில் ஏறி உக்காந்து கொண்டான்."என்னை தாலாட்ட வருவாளோ" என ஹரிஹரனும் இளையராஜாவும் ஆடியோ டேப்பில் பாடிக்கொண்டே வந்தனர்.இடையில் கன்னிவாடி,ஸ்ரீராமபுரம் ஆகிய ஊர்களை தாண்டி வரும்போது நிறைய பெண்கள் ஏறி இறங்கினார்கள்.யார் மீதும் இவன் கவனம் செல்லாமல்,அவள் இங்ஙனம் என்ன செய்து கொண்டு இருப்பாள் என கனவுலகில் மிதந்து கொண்டே வந்தான்.உலகில் அவள் ஒருத்தி மட்டுமே பெண் போலவும்,மற்ற பெண்கள் எல்லாம் அரக்கிகள் போலவும் கருதத் தொடங்கினான்.கண்டக்டர்,'ஒட்டன்சத்திரம் ,ஒட்டன்சத்திரம்' என்று கத்தவும் தான் மாய உலகில் இருந்து நிஜ உலகத்துக்குக் வந்தான்.


பஸ்ஸை விட்டு கீழே இறங்கி எதிர் முனையில் சென்று திண்டுக்கல் செல்லும் பேருந்துகள் அருகில் நிற்க தொடங்கினான். இப்போது அவள் வழக்கமாக செல்லும் பஸ் வந்து சேர்ந்து விட்டது. அவளுடைய சோடிகளான வெள்ளச்சி, குறத்தி (பட்ட பெயர் தான்!) நின்று கொண்டு இருந்தார்கள்.இன்னும் அவள் வந்து சேரவில்லை.வெள்ளச்சி (அய்யர் ஆத்து பொண்ணு) இவனை பார்த்து முறைப்பது போல இருந்தது.குறத்தி இவனை பார்த்து நமட்டுச் சிரிப்பை அவளிடம் உதிர்த்தாள்.இப்போது போனால் தான் 9 .15 மணிக்கு பரீட்சைக்கு போக முடியும். பஸ் கிளம்புவது போல இருந்தது, இந்த பஸ்ஸில் ஏறுவதா , வேண்டாமா என யோசித்து கொண்டு இருக்கும் போது தூக்க முடியாமல் ஒரு பையை தூக்கிக்கொண்டு ஓடி வந்தாள். அவள் ஏறிய பின்னர் இவனும் அதே வண்டியில் ஏறினான்.

இவன் அவள் பக்கமே பார்வையை செலுத்தி கொண்டு இருந்தான்.எதேச்சையாக இவன் பக்கம் திரும்பி,இவனை கண்டதும் தலையை கவிழ்த்துக்கொண்டு அமைதியானாள்.அது வரை அவளிடம் இருந்து குதூகலம் மறைந்து அவ்விடமே அமைதியானது.

"என்னடா பொண்ணு,இவ.இவள் ஏன் இப்படி இருக்கிறாள்.இவளுக்காக நாமும் ஆறு மாத காலமாக காலையில் செம்பட்டி- ஓட்டன்சத்திரம் -திண்டுக்கல்,அப்புறம் சாயங்காலம் திண்டுக்கல்-ஓட்டன்சத்திரம்-செம்பட்டி,இப்படி நாய் மாதிரி அலையிரமோ.அட்லீஸ்ட் திரும்பி கூடப் பாக்க மாட்டேங்கிறா.ஒரு வேளை நம்ம கருப்பா,மூஞ்சி பூரா பருவா இருக்கிறதால பிடிக்கலையோ" இப்படி பரிட்சை எல்லாம் மறந்து போய் அவள் நினைவில் வந்து கொண்டு இருந்தான்.

மணி இப்போது ஒன்பது ஆகி விட்டு இருந்தது. அவள் படிக்கும் கான்வென்ட் ஸ்கூல் பக்கத்துலயே இருக்கு.இவன் செயின்ட் மாரிஸ் போக வேணுமே,அதனால் அவளைப் பார்த்து ஒரு ஏக்க பெருமூச்சு விட்டு ஓடினான்.பேருக்கு பரீட்சைக்கு சென்று கிறுக்கி விட்டு வெளியே வந்தான்.அருணும் இவனுடன் வெளியே வந்தான்.

"என்னடா, பரிட்சை எப்படி எழுதின? என்று கேட்டான். "ஏதோ எழுதி இருக்கேன்டா, சரி வாடா, பஸ் ஸ்டாண்ட் போகலாம்.".
அவனும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து தான் வருகிறான்.அவனை இப்படியே சாயங்காலம் வரை நிக்க வைத்து பேசிக் கொண்டு இருந்தால் அவள் வரும் வரை பொழுது ஓடி விடும். அவன் அதற்குள் "எலேய்,வெங்காயம்.நீ அவளைப் பார்த்து,அவளுக்கு காவல் காத்து வீட்டுல விட்டுட்டு வருவதுக்கு எல்லாம் கம்பெனி கொடுக்க முடியாது..டேய்,நம்ம பிளஸ் டூ படிக்கிறோம்டா..இன்னும் ஒரு மாசத்துல பப்ளிக்டா. இது சரி வர மாதிரித் தெரியல. நான் இந்த வாரம் உங்க வீட்டுல வந்து சொல்கிறேன்.அப்போத் தான்டா நீ சரிப்படுவ. "

இவன் அவன் சொல்லுவதை காதில் ஏற்றிக் கொள்ளாமல் அவனை பஸ்ஸில் ஏற்றி விட்டு பஸ் ஸ்டாண்டில் பராக்கு பார்க்கத் தொடங்கினான். 5 மணி வரைக்கும் பொழுதை எப்படி ஓட்டுவது எனத் தெரியாமல் மலைக்கோட்டை வரைக்கும் போய் வரலாம் என முடிவு செய்து நடக்கத் தொடங்கினான்.

அவள் அப்போது இவனை கடந்து செல்வது போல தோன்றியது. 'இது என்ன பிரமை' என நினைத்து கொண்டே அவள் செல்லும் திசை நோக்கி திரும்பி விரைந்தான்.

'அவள் தான், அவளே தான்'. அவள் மட்டும் தனியாக செல்கின்றாள்.இவனைப் பார்த்து,அவளிடம் எதுவும் முக மாறுதல் எதுவும் இல்லை. அவள் ஏறிய பஸ்ஸில் இவனும் ஏறினான். பஸ் கிளம்பிய உடன் ஏதோ பாராயணம் செய்வது போல முனகத் தொடங்கினாள். இவன் அவளுக்கெதிரே இருந்த சீட்டில் அமர்ந்து அவளை ரசிக்கத் தொடங்கினான். அவளும் இவனை அடிக்கடி திரும்பிப் பார்ப்பது போல் இருந்தது. எப்போதும் போல் முறைக்காமலும் ,தலையை கீழே போடாமலும் இருந்தே இவனுக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது.

"என்ன ஆனாலும் சரி,இன்று இவளிடம் தன்னுடைய காதலைச் சொல்லி விடுவது என முடிவு செய்து கொண்டான். அப்படி பேசுவது என்றால் 'என்ன பேசுவது,எப்படி பேசுவது' என மனதுக்குள் ஒத்திகை பார்த்து கொண்டு வந்தான்.
அவளை முதன் முதலில் பார்த்த நிகழ்வு,அவனின் ஆசை,விருப்பம்,நேசம்,எதிர்காலம்,குழந்தை என மனசு சிறகடித்துப் பறந்து கொண்டு இருந்தது.


அவள் இப்போது பஸ்ஸை விட்டு கீழே இறங்கி விட்டாள். முன் எப்போதையும் விட நிரம்பவும் அழகாக இருப்பது போல் இருந்தாள்.அவள் வீட்டுக்கு ரயில்வே கேட்டைத் தாண்டித் தான் செல்ல வேண்டும். அவளை இவன் பின் தொடருவதைப் பார்த்து எப்போதும் பூனை போல மெதுவாக நடக்கும் அவள் குதிரை போல வேகமாக நடந்து கொண்டு இருந்தாள். இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் மனமோ துடித்து கொண்டு இருந்தது இப்போது அவள் ரயில்வே கேட்டை நெருங்கி விட்டாள். பகல் நேரமாக இருப்பதால் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது.

அவளை எப்படி கூப்பிடுவது என தெரியாமல், 'ஏங்க' என அவளை கூப்பிட்டான்(பெயர் கூடத் தெரியாது).அவள் கண்கள் மிரள விழித்துக் கொண்டு, கால்கள் படபடவென அடித்துக்கொண்டு வேர்த்து விறுவிறுக்க நின்றாள். "நான் உன்னை லவ் பண்றேன்" என்று சொல்ல வாய் எடுத்தான். ஆனால் இவனுக்கும் பதட்டத்தில் உதறலெடுத்தது. இருவருக்கு நடுவே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது,அதில் இருந்தவன் இவர்களை முறைத்துக்கொண்டே சென்றான். இந்த இடைவெளியில் அவள் வீட்டுக்கு ஓடி விட்டாள். இவனுக்கு இவன் மீதே கோவம் கோவமாக வந்தது. பேசாமல் ஒரு கவிதை எழுதி லவ் லெட்டர் மாதிரி கொடுத்து இருக்கலாம். ஆனால் இதெல்லாம் இப்படி திடீரென நடக்கிறதே என நொந்து கொண்டு வந்தான். அவள் இதை போய் வீட்டில் சொல்லி விட்டால் எதுவும் பிரச்னை வருமா எனவும் யோசனை வந்தது. இவ்வாறு குழம்பியவாறே செம்பட்டியை சென்று அடைந்தான்.

அதான் பின்னர் பொங்கல் அது, இதுவென்று மூன்று நாட்களாக அவளைப் பின் தொடரவில்லை. அவளை போய்ப் பார்க்கவும் அச்சமாக இருந்தது. எந்த முனையில் இருந்தும் மிரட்டல் வரவில்லை. அதனால் 'பழைய குருடி , கதவை திறடி' கணக்கா காலையில் செம்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு சென்றான்.ஆனால் அன்று அவள் வரவில்லை. என்ன ஆனது என்று அறிந்து கொள்ள இவன் மனம் துடித்தது. அருணிடம் சொல்லி கேக்க சொல்லலாம் என நினைத்தான். குறத்தி,அப்போது இவனை நோக்கி வந்து "அவளுக்கு காய்ச்சல், ஒரு வாரமா லீவ் போட்டு இருக்கா. இப்படிப்பட்ட நேரத்துல அவ பின்னாடி சுத்தி தொந்தரவு பண்ணாதீங்க" என்று சொன்னாள். இவனுக்கு இப்போது 'அவளுக்கு உடம்பு சரியில்ல' என்பதை விட நம்மால் தான்,அவளுக்கு இப்படி ஆகி விட்டதோ என மனதை போட்டு உடைத்துக் கொண்டான். அன்றில் இருந்து ஒட்டன்சத்திரம் போவதை ஒரு வாரம் தள்ளிப் போடுவது என முடிவு செய்தான்.இவனுக்கு பிரக்டிகல் எக்ஸாம் வேறு நடந்து கொண்டு இருந்தது.

பிரக்டிகல் எக்ஸாம் முடிந்ததும் இன்று அவளைப் பார்த்து விடுவது என முடிவு செய்து கொண்டான்.திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு இருந்தான். இன்று அவள் கலர் ட்ரஸில் வந்தாள். அவளுடன் அவள் தங்கையும் வருகிறாள். ஸ்கூல் டே மாதிரி எதுவும் இருக்கலாமென நினைத்துக்கொண்டான். அவள் இன்று மிகவும் மலர்ச்சியாக இருந்தாள். அவள் பஸ்சில் ஏறும்போது "ஹாப்பி பர்த்டே,அக்கா" என்று அவள் ஸ்கூலில் 10ம் வகுப்பு படிக்கும் பெண் ஒருத்தி வாழ்த்து கூறினாள், இவனுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.அவள் தங்கச்சி இப்போது பஸ்ஸை விட்டு இறங்கி 'நான் ஹாஸ்டலுக்கு போறேன்க்கா, அப்பாவை இந்த வாரம் என்னைய பார்க்க வரச் சொல்லுக்கா' என்று கூறி விட்டு சென்றாள்.

இன்று அவளிடம் பிறந்த நாள் வாழ்த்து சொல்வது போல சொல்லி மன்னிப்பு கேட்டு விடலாம் என தீர்மானம் எடுத்தான்.சென்ற முறை போல இந்த முறை பயம் கொள்ளாமல் பஸ்ஸை விட்டு இறங்கிய இடத்திலே சொல்லி விடுவது என நினைத்துக்கொண்டே பஸ்ஸை விட்டு இறங்கினான். அப்போது அவளை நோக்கி இன்னொரு பெரிய உருவமும் வந்தது. இந்த ஆளை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என நினைத்து கொண்டே அவளை நோக்கி முன்னேறினான். " என்னப்பா தம்பி,உனக்கு என்ன வேணும்.சரி,என் கூட வா." அந்த ஆளின் தோற்றத்தைப் பார்த்து இவனால் மறுத்து எதுவும் பேச முடியாமல் அவருடன் வண்டியில் ஏறினான்.

பழனி சாலையில் அவனை கூட்டிச் சென்று,"தம்பி,வாங்க.உங்களைத் தான் நான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். இங்க பாருங்க.நீங்க செய்றது கொஞ்சம் கூட சரி இல்ல.பாப்பா ரொம்ப பயப்படுறா.சரியாய் படிக்க முடியல,அவளால. வீட்டுக்கு வந்த பின்னாடி அவ அம்மா கிட்ட அழுகிற. நானும் உங்க வயசை தாண்டி வந்தவன் தான்,தம்பி. இன்னமும் வயசு இருக்கு உங்களுக்கு எல்லாம் . நல்லாப் படிச்சு முன்னேறுங்க. அருண் கிட்ட கேட்டேன். உங்க குடும்பத்தை பத்திச் சொன்னான்.நீங்க பிள்ளைமார்,நாங்க கவுண்டர். இது எல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது. சரி,உன்கிட்ட அதெல்லாம் எதுக்கு. இனிமேல் இந்த வேலை எல்லாம் வச்சுக்காதீங்க. அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன் .எனக்கு என் பொண்ணு நிம்மதி தான் முக்கியம்." என்று சொல்லி விட்டு இவனை வந்து பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டார். இவன் அவரிடத்தில் ஒன்றும் பேசாமல் தலையை குனிந்து கொண்டு இருந்தான். அவள் அது வரை அங்கேயே நின்று கொண்டு இருந்தாள். இவனை பரிதாபமாக பார்ப்பது போல இருந்தது. அந்த ஆள் அவளை ஏற்றிக்கொண்டு கிளம்பி விட்டார்.

இவன் இப்போது இந்த உலகத்தில் தான் மட்டும் தனியாக இருப்பது போல இருந்தது. இவளை பார்க்கும் வரை தான் எவ்வாறு இருந்தோம். வீட்டில் இவனை பற்றி எவ்வளவு கனவுக்கோட்டை கட்டி வைத்து இருக்கிறார்கள். இவனுக்கு பின்னர் தங்கை வேறு இருக்கிறாள்.இதெல்லாம் விட , எல்லாரும் இவனுக்கு அறிவுரை சொல்லுவது போல் பட்டது.சரி,இன்றோடு இவளை மறந்து தொலைத்து விடலாம் என எண்ணினான்.கடைசியாக அவளை ஒரு முறை பார்த்து விட்டு போகலாம்,இனிமேல் இந்த திசை பக்கம் கால் வைக்க வேண்டாம்..இரவு பத்து மணி வரைக்கும் அவள் வீட்டை சுற்றி வட்டம் இட்டு வந்தும் அவளை பார்க்கவே முடியவே இல்லை. 10 .30 மணி வாக்கில் அவள் சத்தம் கேட்டு பார்த்தான். அந்த கணத்தில் யார் வெளியே என அவளும் இவனை பார்த்துக்கொண்டு உள்ளே போய் விட்டாள்.

இவனும் மேலும் அங்கு நிற்க பிடிக்காமல் வந்த திசை நோக்கி நடந்தான்.ரயில்வே கேட் சிக்னல் போட்டு இருந்தது.கேட் திறக்கும் வரை காத்து இருக்க வேண்டுமே என நினைத்துக் கொண்டு இருந்தான்.வயிறு வலிக்கத் தொடங்கியது.ஏதாவது சாப்பிட வேண்டும் போலிருந்தது. பசி மயக்கத்திலும், சற்று முன் நடைபெற்ற சம்பவங்களாலும் கேட் திறந்தவுடன் எதிரில் வரும் வண்டி கூட தெரியாமல் லாரியின் முன் போய் விழுந்தான். அந்த இடத்திலேயே லாரி அவனை காவு வாங்கி விட்டது.

மறுநாள் காலை அவள் ரயில்வே கேட்டை தாண்டி சென்றாள்..மக்கள் கூட்டமாக நிற்பதும்,போலீஸ் வண்டி இருப்பதும் தெரிந்தது. என்ன என்று போய் பார்க்க நேரம் இல்லை. பள்ளிக்குச் சென்று விட்டாள். ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் முடிந்து பஸ் ஸ்டாண்ட் வந்து சேர நேரம் ஆகிவிட்டது. இன்று வீட்டுக்கு சித்தி வருகிறார்கள்.சீக்கிரம் போக வேண்டும் என நினைத்துக்கொண்டு வெள்ளச்சியும்,குறத்தி வரும் வரை பொறுக்காமல் கிளம்பி விட்டாள். பஸ்ஸை ஏற போக முன் ஒருவன் மறித்து, "நீ எல்லாம் நல்லா இருப்பியாடி,என்னடி பண்ணினீங்க அவனை "என்றான். அவன் யார் என்பது அவளுக்குத் தெரியும்.அவள் பின்னாடி சுற்றுபவனின் நண்பன் என. இவள் இப்போது ஒன்றும் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை.

"அவன் செத்து போயிட்டான்,தெரியுமாடி.நீயும்,உங்க அப்பாவும் என்ன பண்ணினீங்க அவனை,அடிச்சு கொன்னு ரோட்டுல போட்டுட்டீங்களா,பொட்டைகளா . பிடிக்கலைனா சொல்லி தொலைக்க வேண்டியது தானே? இப்போ அவன் உயிர் அநியாமா போச்சே. அவன் குடும்பத்தை யார் காப்பாத்துவா இனிமேல். நீயெல்லாம் ஒரு பொண்ணு? " தூ எனத் துப்பினான்.

இவளுக்கு இப்போது தான் காலையில் ரயில்வே கேட்டில் கூடி இருந்த கூட்டம் எதற்கு என புரிந்தது.சட்டென இவள் உறுதி தளர்ந்தது.ஆனாலும் தனது அப்பா இவ்வாறு ஒன்றும் செய்து இருக்க மாட்டாள் என நம்பினாள்.

முன்னர் இருந்த கோபம் குறைந்து "எங்க அப்பா ஒண்ணும் செய்து இருக்க மாட்டார்.சும்மா கூட்டிட்டு போய் அட்வைஸ் பண்ணி இருக்கார்,அவ்ளோ தான். தயவு செய்து நம்புங்க. நாங்க ஒரு தப்பும் ஒண்ணும் செய்யல" என்று தணிந்த குரலில் உடைந்து போய் பேசினாள்.

தனக்கு முன்னர் ஒரு பெண் மன்னிப்பு கேட்கும் பாவனையில் பேசுவதைக் கண்டதும் அவன் மனம் இரங்கியது.
'சரி ,அவன் வீட்டில இதைப் பத்தி நான் ஒண்ணும் சொல்லல. ஆனாலும் என் மனசு ஆற மாட்டேங்குது. அவன் உன்னை எப்படி எல்லாம் லவ் பண்ணினான் தெரியுமா? அவன் எந்த அளவுக்கு நல்லவன் ,உனக்குத் தெரியுமா?

'சரிங்க,என்னை மன்னிச்சிடுங்க. நான் இப்போ வீட்டுக்கு போகணும்.அப்புறம் பேசலாம்' என்று அருணிடம் சொல்லி விட்டு கிளம்பினாள்.அன்று இரவு அவளுக்கு தூக்கமே வரவில்லை.தன்னுடைய அப்பா,அம்மா மீதே கோபம் வந்தது.ஆனால் நடந்ததைப் பற்றி எதையும் கேட்டு கொள்ளவில்லை. அவர்களுக்கு விஷயம் தெரிந்து இருக்கும்.

அதன் பின்னர் இவளுக்குப் படிப்பில் நாட்டம் குறைந்தது. அருணிடம், 'இறந்து போனவன் எந்த அளவுக்கு இவனை நேசித்தான்' எனக் கேட்டு இருப்பதிலே பொழுதைச் செலவழித்தாள். பரிட்சை எல்லாம் முடிந்த பின்னர் அருணிடம் பேசுவது அதிகம் ஆயிற்று.ஒரு முறை இறந்தவனின் வீட்டுக்கு அருணுடன் சென்று வந்தாள்.இறந்தவனின் தங்கையை அடிக்கடி பார்த்துப் பேசி அவளை சகஜ நிலைமைக்குக் கொண்டு வர முயற்சித்தாள். அருண் இவள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவது அவளின் அக்கம் பக்க வீடுகளில் விவாதப் பொருளாகியது. அவள் எதையும் கண்டுகொள்ளும் நிலைமையில் இல்லை. அருண் வராமல் இருந்தால் அவனை கடிந்து கொள்வதுமாக அவள் ஒரு விசித்திர நிலைமைக்கு ஆளாகி விட்டு இருந்தாள். அப்பா,அம்மா அவளுக்கு எதை சொன்னாலும் கேட்கும் மனநிலையில் இல்லை.. செய்யக் கூடாத பாவம் ஒன்றை செய்து விட்டதை போலவும், அதற்கு பிரயச்சிதமாக தான் இப்போது நடந்து கொள்வதாகவும் அவள் காட்டிக் கொண்டாள்.

ஒரு சந்தர்ப்பத்தில் அவளுடைய அம்மா, " அருண் ,யாருனு எவரும் கேட்டா நான் என்னாடி சொல்றது. உன் நண்பன்னு சொல்றதா, இல்ல காதலன்னு சொல்றதா ,இல்ல புருஷன்னு சொல்றதா.காலேஜ்க்கு எங்கேயும் படிக்க போகாமல் ,கல்யாணமும் வேணாம்னு சொல்லிக்கிட்டு,என்ன நினைப்புல இருக்க நீ . சொல்லு,நான் தெரிஞ்சுக்கலாம்னு பார்க்கிறேன் " என்று கடுமையாக கேட்டாள்.

அதே வேகத்தில் இவளும் "அருண்,என்னோட புருஷன் தான். போய் உன் புருஷன் கிட்டயும் சொல்லு. ஊரெல்லாம் போய் சொல்லு".

ஏதோ ஒரு வேகத்தில் சொல்லி விட்டோம் ,ஏன் அப்படி பேசினோம் என்று நினைக்கத் தொடங்கினாள். இவளை பற்றி அறிந்தவன் இப்போதைக்கு அருண் மட்டுமே. அவனை கட்டுவதால் தப்பு ஒன்றும் இல்ல. சரி,நம்ம மனசு மாறுவதற்கு முன்னால் அவனை சரிப்படுத்தி உடனே செய்து விட வேண்டும் என உறுதி பூண்டு உறங்கச் சென்றாள்.

அடுத்த நாள் இருவருக்கும் ஒரு கோயில் திருமணம் நடந்தது. இருவர் வீட்டிலும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கு வேறு வழியில்லை,செம்பட்டியில் இறந்தவனின் வீட்டில் தான் இருக்க வேண்டியாதாயிற்று.

Sunday, March 21, 2010

அவனுக்கென்ன ஆடி விட்டான்

நேரம் சாயங்காலம் ஐந்து ஆகி விட்டு இருந்தது. இன்று முடிக்காமல் விட்ட வேலையால் நாளை மேலாளர் திட்டுவாரே என அலுவலகத்தில் மோவாயில் கை வைத்து யோசித்துக்கொண்டு இருந்தான். அவனை அப்போது தோளில் ஒரு கை தட்டியது.

"டேய் மாப்ள, இன்னும் கிளம்பலையா, உங்க ரூமுக்கு. எல்லாரும் போயிட்டாளுக,அப்புறம் இங்க உக்காந்து என்ன வெட்டி முறிக்க போற?"

'இல்லைடா, அங்க போயிமட்டும் என்ன மயிரவா புடுங்க போறோம். பாக்கிறதுக்கு ஒரு நல்ல சினிமா படமும் வரல. ஏதோ சும்மா உக்காரணும்னு தோணுச்சு,அதான் உக்காந்து இருக்கேன்டா.'

"அப்போ உனக்கு இப்போ ஒரு வேலையும் இல்ல, சரி, என்கூட வா. போலாம்."

'எங்க கூட்டிட்டு போறான்னு தெரியல, சரி போவோம்' என்று அவன் வண்டியில் ஏறி சென்றான்.

வேலை விட்டு செல்லும் பெண்கள்,கல்லூரியில் இருந்து துள்ளிகுதித்து வெளி வரும் பெண்கள், கைக்குழந்தை உடன் இருக்கும் பெண்கள், கணவனின் தோளைப் பற்றி நடந்து வரும் பெண்கள், அம்மாவுடன் நடந்து கொண்டே எதிரில் வருபவனை நோட்டம் விடும் பெண்கள்..யப்பா, எத்தனை விதங்கள்..ஆனால் ஒவ்வொன்றும் அருமை என பார்க்கும் பெண்களை பற்றியை வர்ணனையில் சென்று கொண்டு இருந்தான். ஆண்களைப் பார்க்கவே எரிச்சலாக இருந்தது. பெண்களை கண நேரத்தில் பார்க்கும்போது ஏற்படும் கவனக்கலைப்புகளால் புகை,வாகன இரைச்சல் ஒன்றும் அவனை அறியாமல் கடந்தது. எப்போதும் கலகலவென பேசும் அவனும் அமைதியாக வண்டியை ஒட்டிக்கொண்டு போய் கொண்டு இருந்தான். 15 கல் தொலைவை கடந்து நகரின் மையப்பகுதிக்கு வந்து சேர்ந்து விட்டு இருந்தனர்.

வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு " டேய் மாப்ள, எனக்கு பசிக்கிற மாதிரி இருக்கு..உனக்கு பசிக்குதா?/ " என்றான்.

"தாராளமா சாப்பிடலாம். எந்த கடைக்குடா போகலாம் ?

"ராத்திரி நான் வீட்டுல போய் சாப்பிடணும்டா ,இல்லாட்டி அம்மா திட்டுவாங்கடா..அதுனால பேல்பூரி,காளான் ஏதாவது சாப்பிடலாம்"

பேல்பூரி சொல்லிவிட்டு அப்போது தான் இவன் அவனை உற்று கவனித்தான். அமைதியை யாரிடமோ விலைக்கு விற்று விட்டது போல நின்று கொண்டு இருந்தான். தண்ணியை குடம்,குடமாக வாங்கி குடித்து கொண்டு இருந்தான்.. ஆனால் வேர்வை சிந்திக்கொண்டே இருந்தான்.
"என்னடா மச்சான், ஆள் ஒரு மாதிரி இருக்க/என்னடா ஆச்சு..உன்னோட மேனேஜர் எதுவும் சொன்னாளா இன்னக்கி?

"அவ கிடக்கிறாடா ,சொம்பை. கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி அவ்ளோ தான்.. பசி இருப்பதனாலோ, என்னவோ, இதை சாப்பிட்டு ஒரு டீ அடிச்சா எல்லாம் சரியா போகும்டா.", என்று சமாளித்தான். இவனுக்கு அவன் எதையோ மறைக்கிறான் என தெரிந்தது.

" எலேய்,என்கிட்டே காட்டாதடா,உன் படத்த. நானும் வண்டியில வரும் போது இருந்தே பாக்கிறேன்.மூஞ்சியை உம்முன்னு தூக்கி வச்சுக்கிட்டு இருக்க? ரோட்டுல போற பொண்ணுகளைப் பத்தியும் ஒரு கமெண்டும் அடிக்கல. என்னடா பிரச்னை உனக்கு, நீயும் , ப்ரியாவும் லவ் பண்ற மேட்டர் வீட்டுக்கு தெரிஞ்சு போச்சா?

"ஆமாடா,நீ சொன்னது தான்.. லவ் தான்..ஆன நீ நினைக்கிற மாதிரி இல்லை. இது வேற மாதிரி" என்று பீடிகை போடுவது போல தொடங்கினான்.. இதற்குள் பூரி,காளான் வந்தது.ஏதோ வெறி வந்ததை போல இருவரும் சாப்பிட தொடங்கினர். அதை சுத்தமாக சாப்பிட்டு முடித்த பின்னர் அவன் சிறிது தெம்பாக இருப்பது போல தெரிஞ்சது இவனுக்கு,

அவன் சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு இவனிடம்" வாழ்க்கையே வெறுக்குதுடா மாப்ள, இன்னும் எத்தனை நாள் தான் இந்த உடம்பு பூமியில தங்கும்னு தெரியலடா? "

"என்னடா திடீர்னு , என்னா ஆச்சு.. சும்மா கிறுக்கன் மாதிரி உளறாதடா,அப்பா,அம்மா,அக்கா எல்லாரும் வேலைக்கு போறாங்க..நீயும் நல்லா சம்பாதிக்கிற. எங்களை மாதிரியா? நீ ராசா வீட்டு கன்னுக்குட்டி.. எல்லாம் அதுவா நடக்கும்டா அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருடா. ஏன் ப்ரியா,கல்யாணத்துக்கு ரொம்ப அவசரப்படுதா? "

"டேய்,அவ தான்டா,ப்ரியா தான் பிரச்சனையே.. நேத்து ராத்திரி நேரா அவ என் வீட்டுக்கு வந்துட்டா."

"ஹேய், ரொம்ப நல்லதா போச்சு..உங்க அப்ஸ் என்னடா சொன்னார்? "

"என்னோட கெட்ட நேரம்,நேத்து எங்க வீட்டுல யாருமே இல்ல."

"ஏன்டா கூறுகெட்ட குப்பா, வீட்டுல யாருமே இல்லேன்னா அது உங்களுக்கு நல்ல நேரம் தானடா? "

"இல்லைடா மாப்ள, அவ வந்த உடனே நேரா என்னோட ரூமுக்கு வந்தா. கொஞ்ச நேரம் சிரிச்சு பேசிக்கொண்டு இருந்தோம்டா.அவ போட்டு இருந்த சுடி ரொம்ப மெல்லிசா இருந்ததுடா. என்னால அடக்க முடியாம கப்புன்னு அவ காயை பிடிச்சிட்டேன்டா..அவ ஏதோ சாலை கொஞ்சம் இழுத்து விட்ட மாதிரி சிலும்பினா.அப்புறம் என்னை பார்த்து அவ சிரிச்சா. என் கை சும்மா இருக்குமா, புகுந்து விளையாடி விட்டேன். அவளும் ஒண்ணும் சொல்லவே இல்லை.அவளுக்கும் நல்லா இருந்து இருக்கும் போல. ரெண்டு பேரும் அப்படியே கட்டிபிடித்துக்கொண்டு உருண்டோம். நானும் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி அப்படியே அவளோட அது மேல விரலை விட்டு அவ மூடை ஏத்தி விட்டுகிட்டு இருந்தேன். இப்படி நடந்து கொண்டு இருக்கும்போது எங்க அக்கா வந்துட்டா.
யாரோ வருவது போல தெரியவும் அப்படியே துணியை சரி பண்ணிக்கிட்டு வெளியே வந்தோம்.அவளைப் பத்தி எங்க அக்காவுக்கு அரசல் புரசலா தெரியும்.. என்னைய ஒரு முறை முறைத்து விட்டு,அவளை பார்த்து சிரிப்பது போல 'வாம்மா , நல்லா இருக்கியா?" கேட்டுக்கிட்டே அவ ரூமுக்கு போயிட்டா. ப்ரியாவும் என்னை கண்டு வெட்கப்பட்டது போல முகத்தை மறைத்துக்கொண்டு வெளியே போயிட்டா."

"டேய், நீ பெரிய ஆள் தான்டா, நான் கூட உன்னையப் பத்தி என்னமோன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். கலக்கிட்ட. சரி விடு, இதெல்லாம் உங்களை மாதிரி லவ் பண்றவங்களுக்கு சாதாரணம் தானடா. இதுக்கு போய் மனசை உலப்பிகிட்டு அலையுற? ஏன்,இன்னிக்கி ப்ரியா எதுவும் திட்டினாளா? இல்லை,உங்க அக்கா வீட்டுல சொல்லிட்டாங்களா? "

"இல்லடா மாப்ள, நேத்து அவளை நான் டச் பண்ணிட்டேன்ல.அதான்டா,எனக்கு பயமா இருக்கு. எய்ட்ஸ் எதுவும் வந்து தொலைச்சிடுமோன்னு பயத்துல இன்னிக்கி காலைல வந்து ரத்தம் டெஸ்ட் பண்றதுக்காக கொடுத்து இருக்கேன்.எட்டு மணிக்கு ரிசல்ட் கிடைச்சிடும், வாடா மாப்ள போகலாம்..எனக்கு பயமா இருக்குடா..அப்படி இருந்திட்டா,எப்படிடா எவன் மூஞ்சியிலயும் முழிக்கிறது?

"டேய் விவரம் கெட்ட குப்பா, நீ உன் விரலை தான உள்ள விட்ட? இல்லை,வேற எதையும் விட்டியா? விரலை மட்டும் விட்டா எய்ட்ஸ் வராதுடா.நீயெல்லாம் நாலு வருஷம் படிச்சு டிகிரி வேற வாங்கி இருக்க..சின்னபையன் மாதிரி ரவுசு பண்ணாத,ஒரே சிரிப்பா இருக்கு. வெளியில போய் சொல்லாத, ஊரே சிரிக்கும்.. "

"இல்லை,சரி. உன்கிட்ட சொல்றதுக்கு என்னா, நான் அவளோட அதுக்குள்ள விடும்போது ரெண்டு செகண்ட்க்குள்ள வெளியில லீக் ஆகிடுச்சுடா.. அதுக்குள்ள எங்க அக்கா வேற வந்துட்டாங்களா. வேற ஒண்ணும் பண்ண முடியல."

"சரிடா, மொட்டை தலைக்கும் ,முழங்காலுக்கும் ஏன்டா முடிச்சு போடற? அதுக்கும் நீ இப்போ எய்ட்ஸ் டெஸ்ட் பண்றதுக்கும் என்னடா சம்பந்தம் இருக்குது?"

"உனக்கென்னடா தெரியும் வெங்காயம், அவனவனுக்கு வந்தாத் தான் தெரியும் காய்ச்சலும் ,தலைவலியும். நான் அவளை லவ் பண்ணத் தொடங்கியே ஒரு மூணு மாசம் தான் ஆகி இருக்கும்.. நான் அன்னிக்கி அவளை பண்ணும்போது அவகிட்ட எந்த எதிர்ப்பும் இல்லை.அவளே வேண்டி என்னைய தூண்டி அனுபவிச்சது மாதிரி இருந்ததுடா.. அதான், எனக்கு சந்தேகமா இருக்கு.. நான் தான் அவளுக்கு முதலா, இல்ல வேற யாருமாவதுனு. இப்போ சொல்லுடா,நான் என்ன பண்றது? " சொல்லிக்கொண்டே அப்படியே அழுகத்
தொடங்கி விட்டான்.

இப்போது இவன் நிலைமை தர்மசங்கடமாக ஆகத் தொடங்கியது. "இவிங்க எல்லாம் எதுக்கு இப்படி லவ் பண்ணிக்கிட்டு அப்புறம் ஏன் இப்படி அழுகிறாங்க.நம்ம சொன்னாலும் கேக்க மாட்டானுக. என்னத்த சொல்லி இவனை சரி பண்றது?"இவன் அவனை வண்டியில் ஏற்றிக்கொண்டு லேபுக்கு வந்தார்கள்.
ரிசல்ட் எப்படி இருக்கும் என தெரியாமல் மன கலக்கத்தில் உள்ளே வராமல் வெளியே நின்று கொண்டான்..
"நீ போயி வாங்கி வாடா..நல்லா இருந்தா என்கிட்டே வா,இல்லாட்டி அப்படியே உள்ளே இருந்துக்க.. நான் கிளம்பிடுவேன்."

இவன் தான் உள்ளே போயி ரிப்போர்ட்டை வாங்கி பார்த்தான்.. அவன் அழுது புலம்பியது போல ஒன்றும் இல்லை..இவனுக்கும் சப்பென்று ஆகி விட்டது. ஏன், தான் இப்படி எல்லாம் நினைக்கிறோம் என தன்னையே திட்டிக்கொண்டான். வெளியே வந்து அவனிடம் விசயத்தை கூறியதும் அப்படியே இவனை தூக்கி வைத்து ஆனந்த கூத்தாடினான்.

"சரி, மாப்ள.. ரொம்ப தேங்க்ஸ். இதுவரைக்கும் நடந்தது எல்லாம் காதோடு காதா இருக்கட்டும். எவன்கிட்டயும் போயி உளறி வைக்காதா! அப்புறம் இந்த கவுண்டன் மானம் மரியாதை என்ன ஆகிறது? நீ அப்படியே பஸ் ஸ்டாண்ட்க்கு நடந்து போயி ரூமுக்கு போயிட்றியா? நான் போயி ப்ரியாவ பிக்அப் பண்ணிக்கணும்டா." சொல்லிக்கொண்டே வண்டியை உதைத்துக்கொண்டு விருட்டென கிளம்பினான்.

இவன் கையில் நல்ல வேளை பத்து ரூபாய் இருந்தது. பஸ் ஏறி ரூமுக்கு போயி விடலாம். இவன் கூட வந்து, அவன் வண்டிக்கு இவன் பெட்ரோல் அடித்து, காளான் பேல் பூரி வாங்கி கொடுத்து,அவன் புலம்பலுக்கு 'ஊ' கொடுத்து,ரிப்போர்ட் வாங்க போகும் போது லேப்ல இருந்த பிகரை சைட் அடிக்கும்போது அவள் மூஞ்சியை திருப்பிக்கொண்டதும் ஏனோ நினைவுக்கு வந்தது. இங்கு இவனுக்கு மகிழ்ச்சியடையும் வகையில் எதுவும் நடக்கவில்லை.ஆனால் மனம் ஒரு வித பரவச நிலையில் இருந்தது.உள்ளம் ஆனந்த கூத்து ஆடிக்கொண்டு இருந்தது.அவன் உடலும் அங்கேயே ஆடித் தீர்க்க வேண்டும் போல் இருந்தது.
இதுவும் கூட ஒரு சுகமே!!!

Saturday, March 13, 2010

இப்படிக்கு இருவர்

சாலையின் இருமருங்கிலும் ஆண்,பெண் ,குழந்தை, கொசு, நாய்,பூனை இன்னும் பல ஜீவராசிகள் குரல் எழுப்பி ஒரே இரைச்சலாக இருந்தது. இந்த மனிதர்கள் பேசாமல் அமைதியாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்,ஒரு வேளை,அப்படி இருந்தால் இறந்து விட்டதாக நினைத்து விடுவார்களோ! அப்போது அவனுடைய அலைபேசியிலும் இருந்து ஒரு பாட்டு ஒலித்தது. உடனே எடுக்காமல் மக்கள் நடமாட்டம் குறைந்த இடத்துக்கு வந்து அலைபேசியை அமுக்கினான்.

"என்னை எப்போடா கல்யாணம் பண்ணிக்க போற?"

"யே, எப்படி இருக்க. எங்க இருக்க இப்போ? யார்கிட்டயும் எடுத்த உடனே என்ன பேசுறதுனு யாரும் உனக்கு சொல்லி தரலையா? இன்னும் கொஞ்ச நாள் பொறு.நான் பண்ணிக்கிறேன்."

"இன்னும் எத்தனை நாள்டா உனக்காக பொறுத்துக்கிட்டு இருக்கிறது?. உனக்காக ஊர்க்காரன் கிண்டல்,கேலி,பேச்சு இதெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு உன்கூட பழகிக்கிட்டு இருக்கேன்ல!. இல்ல, எனக்கு அழகு தான் இல்லையா? என் உடம்பு உனக்கு சலிச்சு,கிழிச்சு போச்சா? எனக்கு இன்னைக்கி ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகனும். "

இவனுக்கு பேச சந்தர்ப்பம் கொடுக்காமல் எதிர்முனையில் இருந்து பேச்சு எதிரொலியாக வந்து கொண்டு இருந்தது.
"இல்லப்பா,இன்னும் இன்னும் கொஞ்சம் நேரம் கொடு.நானும் எங்க வீட்டில நம்ம விஷயத்தை பத்தி பேசிட்டு சொல்கிறேன்.சும்மா பறக்காதா, நான் உன்னைய விட்டு எங்க போக போகிறேன்?.எனக்கு மட்டும் உன் மேல ஆசை இல்லையா?.எப்படியும் இன்னும் ரெண்டு ,மூணு மாசத்துல முடிச்சிடலாம்.சுடுதண்ணிய காலில கொட்டின மாதிரி நிக்காதா?.என்னா,நான் சொல்றது புரியுதா? "

"இல்லப்பா, நானும் அவசரம் இல்லைன்னு தான் இருந்தேன்.ஆனா இன்னிக்கி உன்னோட அப்பா என்கிட்டே வந்து என் தங்கையை உனக்கு கட்டி வைக்கலாமானு கேக்கிறார். நான் அவ அளவுக்கு படிக்கலை தான், சம்பளம் குறைவு தான். ஆனா நான் இருக்கும்போது எப்படி அவளை,உனக்கு? எனக்கு வந்த கோபத்துக்கு அப்படியே உங்க அப்பாவை கன்னத்துல ஒரு விடு, விடலாம்னு பார்த்தேன்..சரி,என்ன இருந்தாலும் எனக்கு வருங்கால மாமனார் இல்லையா அவரு, அதான் அப்படியே விட்டுட்டேன்.இப்போ அவ,அதான் என் தங்கச்சி என் அடிமடியிலே கை வச்சுட்டா. நீயும் அவளை நோட்டம் விடும்போது நான் கொஞ்சம் உஷாரா இருந்து இருக்கணும்.எனக்கு அது புரியாம போச்சே.
நீ ஏன் இவ்வளவு POSSESIVE ஆக இருக்கிறேன்னு கேக்கிறியா?
ஏன்னா,நான் உன்னை அந்த அளவுக்கு காதலிக்கிறேன்டா. என்னைய புரிஞ்சுக்கட்டு இருப்பேன்னு நினைக்கிறேன்."

"ஏய், இட்ஸ் வெரி நைஸ் ஐடியா.. இந்த ஐடியா கூட நல்லாத் தான் இருக்கு. உன் தங்கச்சியைக் கட்டிக்கிட்டு , அப்படியே உன்னயவும் வச்சுக்கலாம் போலவே! ச்சே,எங்க அப்பாவுக்கு தோணின எண்ணம் கூட எனக்கு ஏன் வரலே? எல்லாம் உன்கூட சேர்ந்த பின்னாடி தான் இப்படி மரை கழண்டு போச்சு. "

"டே,உன் எச்ச புத்தியை காட்டுற,பாத்தியா.நீ எனக்கு மட்டும் தான். இதை நான் யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுத் தர மாட்டேன். நீ சிகப்பா வாட்ட சாட்டமா இருக்கிறது தான் பிரச்சினையே. இதுக்குத் தான் பொண்ணுக அதிகம் வேலை பாக்கிற கம்பெனிக்குப் போயி சேர வேணாம்னு சொன்னேன்.இப்போ பாரு,நீ எவளைப் பார்த்தாலும் நாக்கை தொங்கபோட்டுக்கிட்டு அலையுற.
நான் எவ்வளவு நேர்மையா உனக்கு உண்மையா இருக்கேன். எப்போ பார்த்தாலும் நான் உன் நினைப்புல தான் இருக்கேன். என்னை மறந்து கைவிட்டுறாத. உன்னைய விட இந்த உலகத்துல என்னை புரிஞ்சவங்க யாரு இருக்கா? "

"கார்த்திக், சும்மா சின்னபுள்ள மாதிரி விளையாடாம வீம்பா பேசாம கொஞ்சம் நடைமுறைக்கு ஒத்து வருகிற மாதிரி பாருடா. நம்ம ரெண்டு பேரும் நல்ல வேலையில இருக்கோம்,நிறைய சம்பாதிக்கிறோம்.நமக்குன்னு அடுத்த தலைமுறை வேணும்,பேசாம ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்குவோம்.நம்ம அப்புறம் எப்பவும் போலவே இருப்போம்.அவளுக ஒத்து வந்தா பார்ப்போம். இல்லாட்டி அவளுக கிட்ட இருந்து வந்த வரதட்சணையை வச்சுக்கிட்டு அவளுகளை கழட்டி விட்டுடுவோம்.நம்ம செய்யாட்டியும் அவளுகளே ஓடிட மாட்டாளுக?. நம்ம காதல் உணமையானதுடா.நம்மளை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது "

"நீ பயப்படுற அளவுக்கு ஒண்ணும் இல்லடா,விஜய். இப்போ தான் சட்டப்பூர்வமா GAY கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க.அப்புறம் குழந்தை மேட்டரை நான் பார்த்துக்கிறேன் மச்சி, ஒரு ஆறு மாசம் முன்னாடி ஒருத்தன் அறுவை சிகிச்சை பண்ணி குழந்தை பெத்துக்கிட்டான்.அப்புறம் என் தங்கச்சியை விட்டுடு,வேற ஒரு பொண்ணை பார்ப்போம் உனக்கு. சரி,இவ்வளவு சொல்ற நீ, அதுலயும் ஒரு அர்த்தம் இருக்கு..ஏன்னா, என்னால இனிமேல் ஒரு பொட்டச்சி முந்தானைய புடிச்சு ,அவுளுகளை நக்கி ,ம்ம்... நினைச்சு பாக்கவே கேவலமா இருக்குடா."

"சரிடா மாப்ள, கவலையை விடு.. எல்லாம் நான் சொன்ன மாதிரி பண்ணிடுவோம். உனக்கு எப்பவும் நான் இருக்கேன்டா."

"நாம் இருவர், நமக்கு நாமே" என காதல் பாட்டு பாடி உரையை நிறைவு செய்தனர்.

Friday, March 12, 2010

பொய்யின் நிழல்

இன்று அவன் வாழ்க்கையில் நிரம்பவும் மகிழ்ச்சி பெற்றவனாக இருந்தான். அதிகாலையில் விரைவாக எழுந்த போதும், அதற்குரிய களைப்பு இல்லாமல் உற்சாகமாக இருந்தான்..இதற்கெல்லாம் காரணம் நேற்று அவனுக்கு வந்த மின்அஞ்சல் தான். அவனுக்கு வெளிநாட்டு வேலை கிடைத்து விட்டதாகவும், அதற்கு தேவையான மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டுமென்று அவன் வேலைக்குச் செல்லப் போகும் மேலாளார் அனுப்பி இருந்தார். மேலும்,விசா கிடைக்கும் வரை இப்போது பார்த்துக் கொண்டு இருக்கும் வேலையை விட்டுவிட வேண்டாமென்று கரிசனமாகவும் கூறி இருந்தார்.. (இவன் தான் இப்போ வேலையே பாக்கிறது இல்லையே, அப்புறம் எங்க விடுறது?? ) ..

மருத்துவப் பரிசோதனை முடிந்து வேலை கிடைப்பது உறுதியாகும் வரை வீட்டில் வாய் திறப்பது இல்லை என்று ஒரு கொள்கை முடிவு எடுத்து இருந்தான்.. ("இல்லாட்டி இப்பவே தூரம்,தொலைவு எல்லாம் எதுக்குப்பா,பேசாம இங்கயே வேலை பாருப்பா.. கை , கால் சுகமா இருந்தா போதும்,காசு பணம் பின்னாடி சம்பாரிச்சுக்கலம்னு வீட்டில லாவணி பாட ஆரம்பிச்சுடுவாங்களே." )

வங்கியில் இருந்த இரண்டாயிரம் சொச்சத்தையும் சுரண்டி எடுத்து திருச்சிக்கு வண்டி ஏறினான்.. வண்டியில் கூட்டம் அவ்வளவா இல்ல.. ஒரு பொண்ணும் வண்டியிலே இல்ல..சரி,விட்டு தள்ளு..திருச்சியில் போயி நல்ல பிகருகளை சைட் அடிப்போமே, சன்னலோரத்தில் உக்காந்து பராக்கு பார்த்துக்கிட்டே திருச்சி போயி இறங்கியாச்சி..

ஊர் கந்தக பூமியா! அனல் கொதியா கொதிக்குது.. பசி வேற வயித்தை கிள்ளுது.. காலையில வீட்டுல அம்மா சொல்ல சொல்ல கேக்காம சாப்பிடாம வந்தது தப்புன்னு மரமண்டைக்கு உதித்தது..சரி,நிறைய சாப்பிட்டு மெடிக்கல் பண்ணும்போது வயிறு ஏதாவது ஆகிட்டா என்ன பண்றதுன்னு ஒரு வடை,டீ மட்டும் அடிச்சிட்டு ஆஸ்பத்திரிக்கு போனான்..
ஆஸ்பத்திரிக்கு உள்ள போனா, சந்தைக்கடை மாதிரி ஒரே கூட்டம்.. ஒரு கேரளா நர்ஸ் ஒருத்தி , " பாஸ்போர்ட் கொடுங்க, பணம் 2000 ,போட்டோ கொடுங்க" வாய் வலிக்காமல் கத்திக்கொண்டே இருந்தாள்.. அனைவரும் அவளை பார்த்து சலுவா ஒழுக விட்டபடியே அவளிடம் போய் அவள் கேட்டதை கொடுத்தனர்..(ம்ம்.. ஒண்ணும் மோசமில்ல, கொஞ்சம் கறுப்பா இருந்தாலும் முலை,கிலை கொஞ்சம் எடுப்பா இருக்கிறதால பாக்கலாம்).. அவனவன் பணத்தை கட்டிட்டு போயி செத்த பிணம் உக்காந்து இருக்கிற மாதிரி வரிசையா உக்காந்தாங்க.. கொஞ்ச நேரத்துல ஒடிசலாக ஒரு செவிலி வந்து அனைவரையும் ஒவ்வொரு ஆளா வரச் சொல்லி யூரின், ரத்த அழுத்த,பாடி ஸ்கேன் எடுத்தாள்.. அப்புறம் ஒரு 10 நிமிஷம் கழிச்சு வந்து, 'எல்லாரும் மூணு மணிக்கு வந்து ரிசல்ட் வாங்கிட்டு போங்க' என்றாள்..

மணி இப்போது தான் 12 ஆகி இருந்தது. 3 மணி வரைக்கும் இந்த ஊர்ல எப்படிடா பொழுதைப் போக்குறதுனு தெரியாம யோசிக்கும் போது அவளிடம் இருந்து ஒரு மிஸ்டு கால் வந்தது.. இந்நேரத்துல எதுக்கு அவ கூப்பிடுறா, ஒரு வேளை காலேஜ்க்கு போகலையா? இப்படி நினைத்துக்கொண்டே அவளுக்கு போன் அடிச்சான்.. (கொஞ்ச நேரம் கடலைய போடுவோம்..நமக்கும் நேரம் ஓடுன மாதிரி இருக்கும்) ..

"என்னடா செல்லம், இந்நேரத்துல! காலேஜ்க்கு போகலையா? "
"இல்லைடா பார்த்தி ,அப்புறம் உனக்கு ஒரு ஆச்சரியமான செய்தி. எங்கே சொல்லு , பார்ப்போம்"

"என்னா ,ரோட்டுல எவனும் உன்னையப் பார்த்து ஜொள்ளு விட்டானா, இல்ல உனக்கு உங்க வீட்டுல யாராவது மாப்பிளை பார்த்து இருக்காங்களா? "
"போடா பொறுக்கி, அதெல்லாம் இல்லைடா..நான் இப்போ திண்டுக்கல்ல இருக்கேன், நீ எங்கடா இருக்க? நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்"

"அடி சக்கை, நான் இப்போ திருச்சியில ஒரு வேலையா இருக்கேன்மா .. ராத்திரி 7 ,8 மணிக்கெல்லாம் வந்துடுவேன்.. "
" நான் உன் மேல எவ்ளோ ஆசையா இங்க வந்தேன் தெரியுமா, நீ என்னடானா? "

"சரிடா , தங்கம்,கோவிச்சுக்காத.. நான் வேலை முடிஞ்ச அடுத்த நிமிஷம் உன் முன்னாடி நிப்பேன்டா!"

இவனுக்கு மனம் ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது.. ஒரு மாதமாக அவள் இவனிடம் பேசவில்லை. இன்று அவளாக கூப்பிடுகிறாள்.. வெளிநாட்டுக்கு வேறு போக போகிறோம்.

எப்போடா,மூணு மணி ஆகும்,ரிப்போர்ட் வாங்கிட்டு ஊர் பக்கம் போயி சேரலாம்.. அதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு திட்டம் போட்டுக்கிட்டு உக்காந்து இருந்ததில் 3 மணிக்கு மேல் ஆனது தெரியவில்லை.. ஒரு வழியாக 3 .15 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு போய்க் கொண்டு இருந்தான். எதிரில் வந்தவர்களிடம் "என்னங்க அண்ணா , ரிப்போர்ட் தராங்களா" என்று கேட்டான். அவருக்கு பக்கத்தில் வந்த சின்ன பையன் போல் இருந்த ஒருத்தன் இவனை மேலும் கீழும் பார்த்துக்கொண்டு ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து "சீக்கிரம் போங்க பாஸ், உள்ளே ஒரு முக்கியமான டெஸ்ட் பண்றாங்க". இவன் உள்ளே நுழைவதை பார்த்து அந்த நர்ஸ், "ஏன் இவ்வளவு லேட்" என்று கோவிப்பது போன்ற பாவனையில் "டாக்டர்,வெயிட் பண்றார் , சீக்கிரம் உள்ளே போங்க" என்றாள்.. (பெண்கள் மூஞ்சியை கோணல் ஆக்கினாலும் ,இவனுக்கு உறைக்காது)

உள்ளே அவதி,அவதியாக நுழைந்த இவனைப் பார்த்து டாக்டர், "பேண்டை கழட்டு" என்றார்..
இவனுக்கு எதுக்குடா இந்த ஆள் அவுக்க சொல்றார்னு தெரியாம பொறுமையா கழட்டினான்.(நல்லா வேலை ஜட்டி போட்டுட்டு வந்தோம்!)
"ஜட்டியை கொஞ்சம் கீழே இறக்கு"
இவன் கொஞ்சம் வெட்கப்பட்டுக்கிட்டு இறக்க யோசித்தான்.. கொஞ்சம் மெதுவாக கீழே இறக்கினான்..
டாக்டர் கடுப்பாகி, "நல்லா கீழ இறக்கி விடுயா " என்று சொல்லிக்கொண்டே அவன் ஜட்டியை பிடித்து கீழே இறக்கி விட்டார்.. இப்போது முழு நிர்வாணமாக அவர் முன்னே நின்றான்..
அவனுடைய உறுப்பானது மயிர்கற்றைகள் நீங்காமல் காடு போலே நிரவி கிடந்தது.(தெரிஞ்சு இருந்தா செரைச்சிட்டாவது வந்து இருக்கலாம்) டாக்டர் அவனை மேலும் உற்று நோக்கினார்.பின்னர் மண்டையை ஏதோ காணாததை கண்டு விட்டவர் போலவே நெற்றியை சுருக்கிக்கொண்டு ,"சரி,போ..போ.. என்றார்." (அப்பாடா, தப்பிச்சோம்டா,. சாமி. இப்படி குறுகுறுனு பாக்கிறானே")
உடுப்பு எல்லாத்தையும் மாட்டிக்கொண்டு வெளியே வந்தான்.. (இவன் ஆம்பளையா, இல்ல பொம்பளையா இல்ல திருநங்கையானு பாக்கணும் போல. அப்போ தான் இவனுக்கு புரிஞ்சது.)தான் உள்ளே நடந்து கொண்டதை நினைத்து வெட்கம் அடைந்தான்.. நர்ஸ்,இவனையே பார்த்து சிரிப்பதாக இவனுக்குள் மனதிற்குள் தோன்றி இவனை நிம்மதி இல்லாதவனாக ஆக்கிக்கொண்டு இருந்தது.

4 மணி வாக்கில் அந்த நர்ஸ் மறுபடியும் வந்தாள்.. அவள் கையில் பல ரிப்போர்ட்கள் இருந்தது..உடனே அங்கு இருந்த பத்து,பதினைந்து ஆட்களும் ஏதோ பரபரப்புக்கு ஆட்பட்டவர்கள் போல எழுந்து நின்றனர். ஒவ்வொரு ஆளா பேர் வாசிச்சு கொடுத்துக்கிட்டே இருக்கா, இவன் முறை இன்னும் வரவே இல்லை..இன்னும் மூன்று பேர் மட்டுமே இருந்தார்கள்..
"ஒரு 5 நிமிஷம் பொறுங்க, " சொல்லிட்டு அவள் மறுபடியும் உள்ளே ஓடினாள்.. அவன் பக்கத்தில் இருந்த இருவரும் கோபத்தின் எல்லைக்கு சென்று "நாங்க இனி கோயம்புத்தூர் போகணும்,சீக்கிரம் கொடம்மா" என்றார்கள்.. அவனிடம் புலம்ப ஆரம்பித்தார்கள்..
பத்து நிமிடம் கழித்து அந்த டாக்டர் வந்தான்.. "இதில் பழனி யாருப்பா? உனக்கு ஹார்ட்ல பிரச்னை இருக்கு. அதுனால நீங்க வெளிநாட்டுக்கு போக முடியாது."
பழனி "சார் ,நீங்க பெரியவர்.. நீங்க அது மாதிரி சொல்ல கூடாது.. நான் இந்த வேலைக்கு போறதுக்காக ஏஜென்ட்கிட்ட ஒரு லட்சம் கொடுத்து இருக்கேன்.. நான் அங்க போயி வேலை பார்த்து தான் என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்,, கொஞ்சம் மனசு பண்ணுங்கயா?"

"நான் ஒண்ணும் பண்ண முடியாதுப்பா, வேணும்னா ஒரு ரெண்டு மாசம் கழிச்சு உடம்பை நல்லா தேத்தி வச்சிட்டு வாங்க ,அப்போ பார்ப்போம்"

சரி அடுத்த ஆளு, "செல்வராஜ். உங்களுக்கு எய்ட்ஸ் அறிகுறி இருக்கு.. அதுனால உங்களுக்கும் ரிப்போர்ட் கொடுக்க முடியாது." சுற்றி நின்ற அனைத்து கண்களும் , செல்வராஜ் மேல் வட்டமிட்டது.செல்வராஜுடைய கண் இருட்டுகட்டிகொண்டு வந்தது.அவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை..சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தான்.அவனை ரூமில் அட்மிட் பண்ண சொல்லி டாக்டர் சொன்னார்..
இப்போது இவனுக்கு உண்மையிலே கை,கால் வேர்த்து கொட்ட தொடங்கியது.. "நமக்கு ஏன் ரிப்போர்ட் இன்னும் வரல, நமக்கும் ஏதோ நோய் இருக்குமே, ஒழுங்காத் தானா இருக்கோம் நம்ம, என்னடா நடக்குது சாமி இங்க " என குழம்ப தொடங்கினான்.இவனை கண்டுகொள்ளதவர் போல டாக்டர் உள்ளே போயி விட்டார். இவனுக்கும் அங்கே மயக்கம் வரும் போல இருந்தது.டாக்டரை கூப்பிட்டு நம்மளா கேட்டா , அவர் உனக்கும் எதாவது நோய் இருக்குனு சொல்லிட்டா ,என்ன பண்றது.. பேசாமா ரிப்போர்ட் வாங்காம ஊருக்கு ஓடி விடலாம் என தோணியது..
அப்போது அவள் அரக்க பறக்க ஓடி வந்து" இந்தாங்க,உங்க ரிப்போர்ட்.. கம்ப்யூட்டர் தகராறு பண்ணிடிச்சு..அதான் லேட்..நீங்க பிட்" .. இவனுக்கு அவள் சொன்னது எதுவும் காதில் விழுகவே இல்லை... கொடுத்ததை வாங்கி அவளுக்கு நன்றி கூட சொல்லாமல் வெளியேறினான்..

இங்ஙனம் இவனுக்கு ரிப்போர்ட் கிடைத்த சந்தோசம் மறந்து போய் அவர்கள் இருவரின் நிலை குறித்து வருந்தி நடந்தான்.. அப்போது அவன் நண்பனிடம் இருந்து போன் வந்தது.
"என்னடா பார்த்தி ,எங்க இருக்க? "
"திருச்சியில"
'அங்க என்ன,மெடிக்கல் முடிஞ்சதா?"
"எல்லாம் முடிஞ்சு போச்சுடா .. "
"ஏன்டா,வருத்தமா சொல்ற? என்னாச்சுடா ? எப்போ ஊருக்கு வர்ற? "
"இல்லைடா ராஜேஷ் , நான் ஊருக்கு இனிமேல் வர்றதா இல்ல.. எனக்கு எய்ட்ஸ் அறிகுறி இருக்குனு சொல்றாங்கடா . நான் இனி எங்கயாவது போறேன்.இதை யார்கிட்டயும் சொல்லிட வேண்டாம்..முக்கியமா எங்க வீட்டுல! "
"டேய்,கிறுக்கன் மாதிரி உளறாதடா. நேரா ஊருக்கு வா.இப்போவெல்லாம் எய்ட்ஸ்க்கு சிகிச்சை இருக்குனு சொல்றாங்கடா. "

பேசிக்கொண்டு இருக்கும்போதே அலைபேசி பேட்டரி குறைஞ்சு அணைந்து போனது.ராஜேசிடம் ஏன் இப்படி பேசினோம்? எது இவனை இது மாதிரி பேச தூண்டியது? அவளை ராத்திரி பார்த்து அதுக்கு அப்புறம் ஊருக்கு போக முடியுமா என தெரியாததால் இப்படி ஒரு இல்லாத ஒரு பொய்யை கூற வேண்டியதாயிற்று.. இல்லாட்டியும் அவன் ராத்திரி படம் பார்த்திட்டு ஊருக்கு போகலாம்னு சொல்லுவான்.சரி,பரவாயில்லை.நாளைக்கு அவனை நேரில் பாக்கும் போது சொல்லிக்கலாம்.. ஒண்ணும் நினைச்சுக்க மாட்டான்,அவன் நல்ல பையன்..

அடுத்த 2 மணி நேரத்தில் திண்டுக்கலை எட்டி விட்டான் . வேறு எங்கும் செல்லாமல் மஞ்சு வீட்டுக்கே சென்றான். அவள் வீட்டில் யாரும் இல்லை.அவள் மட்டும் தனித்து இருந்தாள். இவனை கண்டதும் முகமலர்ச்சியோடு உள்ளே கூப்பிட்டு தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். அவள் எப்போதும் போல இல்லாமல் மிகவும் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தாள். குடித்து முடித்தவுடனே இவன் ஏதோ சொல்ல வாய் எடுத்தான்.. அவள் அதற்கு சமயம் கொடுக்காமல் அவனருகில் வந்து முத்தம் கொடுத்தாள்.. அது அந்த நேரத்தில் அவனுக்கு மிகவும் தேவையாகவும், ஆறுதலாகவும் இருந்தது.. பின்பு இருவருக்கும் பேச நேரம் இருக்கவில்லை. முதன்முறையாக மனம் மட்டுமில்லாமல் உடல்கள் இரண்டும் பேசிக்கொண்டன. அவர்களின் விருப்பம் எதையும் அது தேடாமல் அதன் போக்கில் இயங்கி கொண்டு இருந்தது. அவள் இன்றமிழ்ந்த தாமரை மலர் போலவும், இவன் தீப்பிழம்பை கக்கும் சூரியன் போலவும் தோன்றினான்.

ராஜேஷ் அன்று இரவு 10 மணி வரை "பார்த்தி, வந்துவிட்டானா" என அவனுடைய வீட்டுக்கு சென்று அடிக்கடி கேட்டுக்கொண்டு இருந்தான்.. அவன் வீட்டிலும் "என்னப்பா விஷயம், இந்நேரத்துல அவனை தேடுற? அவனும் எங்க போனானோ தெரியல, போனும் போக மாட்டேங்குது" .முதலில் ராஜேஷ் ஒன்றுமில்லப்பா என சமாளித்து பார்த்தான்.. பின்னர் பார்த்தி ஏதாவ்து பண்ணி விட்டால் ,இவங்க பாவமே என எண்ணி 'அப்பா' என்றான்.. அவர் 'என்னப்பா' என்றார்.
ராஜேசுக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை.பின்னர் மனைதை திடப்படுத்திக்கொண்டு நாலு மணிக்கு அவன் கூறிய விஷயத்தை மென்றி,முழுங்கி கூறினான். அவனுடைய அப்பா அதிர்ச்சியில் உறைந்தார். சிறிது நேரத்துக்கு இருவரும் எதுவும் பேசாமல் இருந்தனர்.
பின்னர் அவர் சுதாரித்துக்குக்கொண்டு "சரிப்பா,இப்பவே அவன் நண்பர்களுக்கு எல்லாம் சொல்லி , அவன் எங்க வந்தாலும் அங்கேயே தங்க வைக்கச் சொல்லுப்பா.நம்மளும் காலையில வரைக்கும் பார்ப்போம். பார்த்தி, ஏன் இப்படி பண்ணினான் ? நாங்க தான் அவனுக்கு இருக்கோம்ல ,பார்த்துக்க மாட்டோமா? "என்று தலையில் அடித்துக்கொண்டு அழுது புலம்பத் தொடங்கினார்.

ராஜேஷ், அவன் நண்பர்கள் அனைவருக்கும் விசயத்தை கூறாமல் அவனை அங்கு வந்தால் பிடித்து வைத்து இருக்குமாறு சொல்லியும் ,சிலருக்கு சேதி அனுப்பியும் வைத்தான். அதன் பின்னரும் மனம் சமாதானம் அடையாமல் நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டு அவன் வீட்டுக்கு சென்றான்.. எதற்கும் இருக்கட்டும் என்று அவனுடைய எண்ணுக்கும் ஒரு செய்தி அனுப்பினான்.. முன்தினம் அவன் வீட்டில் நடந்த நிகழ்ச்சியை கூறி மறுநாள் வீட்டுக்கு வர வேண்டும் என செய்தி அனுப்பி தூங்கச் சென்றான். தூக்கம் தான் வரவில்லை.

(நம்ம ஆளு தான் அங்க குஜாலா இருக்கானே, மத்தவங்க பாடு அவனுக்கு எங்க தெரிய போகுது?அவ வீட்டுக்கு வந்தப்பவே போனை ஆப் பண்ணி சார்ஜ் போட்டான். சார்ஜ் ஆச்சா என்னானு , அவனுக்கு எங்க தெரியும்? அவர் தான் பயங்கர முக்கியமான வேலையில இருக்கார்ல? )

அவள் தான் காலையில் முதலில் எந்திரித்து அவனை எழுப்பினாள்.. " அப்பா ,அம்மா 8 மணிக்கு வந்துடுவாங்க.சீக்கிரம் எந்திரிச்சு கிளம்புங்க".அவன் போனை ஆன் செய்து விட்டு கழிவறைக்கு சென்றான்.அவன் உள்ளே சென்ற உடனே அவன் போன் வந்தது.யார் இவனுக்கு இந்த நேரத்துல போன் பண்றா,அவன் வீட்டில இருந்து வந்ததை பார்த்திட்டு அவள் அதை எடுக்கவில்லை.அவனுக்கு ரெண்டு சேதி வந்து இருந்தது.'அவனுக்கு என்னதான் வருதோ' என ஆர்வக்கோளாறில் இன்பாக்சில் இருந்த செய்தியை பார்த்த உடனே அவளுக்கு தலைசுற்றியது.அதை பார்த்த சில நொடிகளில்,ராஜேஷ் போன் பண்ணினான்.. அதை எடுத்து விட்டு,இவள் எதுவும் பேசாமல் நின்றாள். "டேய்,வெங்காயம்.. ஏன்டா இப்படி இருக்க. இந்த நோய் வந்தா ஒண்ணும் பிரச்னை இல்லைடா,உங்க வீட்டுக்கும் சொல்லிட்டேன்..நேரா வீட்டுக்கு வாடா..உங்க வீட்டுல அழுகிறாங்க ,பாவம்டா. " .
இவள் எதுவும் பேசாமல் திக்பிரமை பிடித்தவள போல நின்றாள். அவன் அப்போது தான் கழிவறையை விட்டு வெளியே வந்தான்.அவள் நினைவு தடுமாறி கட்டி இருந்த சேலை தலைப்பு நழுவ விட்டு, அவனை கட்டி அணைத்தாள். இருவர் ஆடும் ஆட்டம் மறுபடியும் தொடங்கியது.நல்லபாம்பும்,சாரைப்பாம்பும் ஒன்றை ஒன்று பின்னிப்பிணைந்து கிடைப்பது போல புணையலில் திளைத்தனர் .

பின்னர் அவர்கள் எழுந்திரிக்கவே இல்லை.

வந்து பார்த்த அவளது பெற்றோர்களுக்கு இருவரின் உயிரற்ற சடலங்கள் மட்டுமே கிடைத்தது..

பார்த்தியின் பெற்றோர் அவனை தேடிக்கொண்டே இருந்தார்கள்..