Wednesday, March 16, 2011

இவன் X அவன்

நீண்ட நெடு நாட்களுக்குப் பிறகு சந்திக்க இருக்கும் நண்பனுக்காக பஸ் ஸ்டாண்டில் காத்து இருந்தான்,இவன். பஸ்ஸில் இறங்கி வரும் அவனைப் பார்த்ததும் மனம் இன்னும் பரவசத்தில் மூழ்கியது.

வழக்கமான உரையாடல்களுக்குப் பிறகு, "மணி இப்போ தான் 11 ஆகுது. ரிலாக்ஸ்ல டீ குடிக்கலாமா? இல்லை ஜூஸ் எதுவும் குடிக்கலாமா? " என்றான் இவன்.
"எவன்டா இவன்,அடிக்கிற வெயிலுல டீயாம், டீ. இந்தா எதுத்தாப்டி இருக்க டாஸ்மாக்ல ஒரு பீர் சாப்பிடலாம்" என்று இவனை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

"டேய், இங்க நான் இருக்கிறதை எவனாவது எங்க ஊர்க்காரங்க பார்த்தா வீட்டுல போயி சொல்லுவாங்கடா. வா, நல்ல ஹோட்டலுக்கு போகலாம், இல்லாட்டி மதுரைக்குப் போயி வரலாம்."
"யாருடா இவன்,இந்த காலத்துல பீர் அடிக்க மதுரைக்கு போகலாம்னு. அப்போ நீ இன்னும் குடிக்கப் பழகலையா? விளங்கிடும்.சரி விடு, ரெண்டு பீர் தான், ஒரு பத்து நிமிஷத்துல குடிச்சிட்டு போயிடலாம்."

ஆனால் அவன் பீரைத் தொறந்து ஒவ்வொரு மொடக்கு குடிக்கும் போதெல்லாம் புலம்பலாய் புலம்பி நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. கிளம்பும் போது பாரில் இருந்த பையனுக்கு இவன் பத்து ரூவா கொடுத்ததுக்கு திட்டினான். ரெண்டு ரூவா கொடுத்தா போதும்டா,அவனுக்கு.

இவனுக்கு இருந்த பசிக்கு பாலாஜி,மீனாக்ஷி பவன் முழு சாப்பாடு சாப்பிட்டாத் தான் பசி அடங்கும் போல இருந்தது. ஆனால் அவன், "அங்க கொள்ள காசு வாங்குவாங்கடா" என்று சொல்லி பக்கத்தில இருந்த பரோட்டா கடைக்கு கூட்டிப் போனான். இவனால் அந்த கடையில் இருந்ததை சாப்பிட முடியாமல் ஓமட்டல் வந்தது. இப்படியாக சாப்பிட்டு முடித்து இருவரும் வெளியே வந்தனர்.

திரும்பி வரும் வழியில் ஒரு பொண்ணை அவன் உத்துப் பார்த்துக் கொண்டு நின்று விட்டான்.

"என்னடா ஒரு அட்டு பிகரை சைட் அடிச்சுக்கிட்டு இருக்க? வா,போகலாம்.தியேட்டருக்கு போயி படம் ஏதாவது பார்க்கலாம் " .

"அவ பிகரு இல்லைடா, மேட்டர்பா. ஆள் தேடிக்கிட்டு இருக்கா. படத்துக்கு எல்லாம் வர முடியாது.அந்த வயசு எல்லாம் மாறி போயிடிச்சு" என்று பேசிக்கொண்டே அந்த இடத்தை விட்டு பஸ் ஸ்டாண்ட் பக்கம் வந்தனர்.

" சரி, அப்போ எங்க ஊருக்கு வா. ஒரு ரெண்டு நாள் இருந்திட்டு போகலாம்" என்றான் இவன் .

"இப்பவே அந்த பட்டிக்காட்டுக்கு போயி என்னடா பண்றது? கொஞ்ச நேரம் திண்டுக்கல்ல சுத்திட்டு போயிடுவோம்." என்று அவன் கூற இவனுக்கும் அதுவே சரியாகப்பட்டது.

பஸ் ஸ்டாண்ட்க்குள்ள சுத்தி வரும்போது அவன், "இங்க மேட்டேருக நிறைய நிப்பாளுக.இன்னிக்கின்னு பார்த்து ஒருத்தியையும் காணோமே?". ம்ம் ... எல்லாரும் மாரியம்மன் கோயில் திருவிழா நடக்கிறதால அங்க தொழில் பார்க்க போயி இருப்பாளுக".

"அவளுக எங்கயோ போறாளுக,உனக்கு ஏன்டா இந்த வேலை எல்லாம்."

"இல்லைடா, அவளுக கிட்ட போனா நல்லா இருக்கும், நீ எப்போயாவது போயி இருக்கியா?"

" ச்சே, அவளுக கிட்ட எவன்டா போவான்,. காசை வாங்கிகிட்டு பாவாடையை தூக்கி குத்திட்டுப் போடானு சொல்றவ கிட்டலாம் என்னால போக முடியாது. நம்மளைப் பத்தி நல்லா தெரிஞ்ச பொண்ணா ,அதுவும் கல்யாணம் முடிச்ச பின்னாடி பண்றது தான் நல்லது. நீ எவ கிட்டயும் போயி இருக்கியாடா?"


"ஒரே ஒரு தடவை, அதுவும் உங்க ஊர்க்காரன் ரமேஷ் இருக்கான்ல, அவன் கூடத் தான் சேர்ந்து ஒரு பொண்ணைக் கூட்டி போனோம்.ரெண்டு பேரும் ஒரு நாள் ராத்திரி கடைசி பஸ்சை விட்டு திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்ல நின்னுக்கிட்டு இருந்தோம். அப்போ ஒருத்தி ரமேஷுக்கு சிக்னல் காட்டினா. போகலாமானு அவன் கேட்டான். எனக்கு வேணாம்னு சொல்ல முடியல,வேணும்னு சொல்ல முடியல. சரி பேசுடானு சொன்னேன். அவள் ரெண்டு பேரும் வருவதா இருந்தா நானூறு கேட்டு இருக்கா. ரூம் போடணும்னு சொல்லி இருக்கா. ரமேஷ் அதுவும் இதுவும் சொல்லி இருநூறுக்கு பேசி முடிச்சான். எங்க ரெண்டு பேர் கிட்டயும் சேர்த்து நானூறு தான் இருந்தது. ரமேஷ் சொன்னான், பழனில இருக்கிற நம்மாளுக மடத்துக்கு கூட்டி போயிடுவோம். அங்க நமக்கு தான் வாடகை கிடையாதே. எனக்கும் அதுவே நல்லதுனு தோணுச்சு. அவளையும் கூட்டிகிட்டு மூணு பேரும் பழனி மடத்துக்குப் போயிட்டோம். ரமேஷ் சரக்கும்,பிரியாணியும் வாங்கி வந்தான். நல்லா சாப்பிட்டு முடிச்ச பின்னாடி வேலையைத் தொடங்குவோம்னு முதலில் சாப்பிடத் தொடங்கினோம்.சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதே மடத்துக்காரங்க கதவைத் தட்டி போலீஸ் ரைடு வரப் போறாங்க அதுனால நீங்க போயிடுங்கனு சொல்லவும் போட்டது போட்ட படியே அங்கிருந்து வெளியே வந்தோம். வேற லாட்ஜ்க்கு போகவும் காசு இல்லை. கூட்டி வந்தவளை அப்படியே தொடாமல் அனுப்பவும் மனசு இல்லை.அப்போ தான் ரமேஷ் சொன்னான், மாப்ள செம்பட்டி பக்கத்தில போயிட்டா அங்க நிறைய முள் காடு இருக்கு. அங்க இவளை தள்ளிட்டு போயிடுவோம்னு சொல்லவும் நானும் தலையாட்டி பஸ்ஸில் ஏறி செம்பட்டிக்கு கொஞ்சம் முன்னாடியே வந்து இறங்கிட்டோம்.அதுவரை அலைஞ்ச வெறுப்பு,பனி ரெண்டும் சேர்ந்து நல்ல மூடு வந்து விட்டது. ரமேஷ்லாம் பொறுக்க முடியாம ஓரத்தில நின்னு ஒன்னுக்கு அடிச்சுகிட்டு இருந்தவளை அப்படியே சாய்ச்சு பண்ண ஆரம்பிச்சிட்டான். லைப்ல அப்போ தான்டா முத தடவை ஒரு பொண்ணை முழுக்க துணி இல்லாமா , அப்படியே பார்த்துகிட்டு இருந்தான். அவங்க பண்றதை பார்க்கும்போது கூச்சம் இல்லை. ஒரு த்ரில்லிங்கா இருந்தது. அவன் போட்டு முடிச்சிட்டு நீயும் வந்து செய்யுடானு சொல்லும்போது எனக்கு ஒரு மாதிரி ஆகிடிச்சி. சரக்கு இருந்தா ஒரு தைரியம் வரும்,ஆனா அதுவும் இல்லை. சும்மா இருந்தா அவன் முன்னாடி அசிங்கம்ல. அதுனால அந்த பொண்ணு பக்கத்துல போயி பையை மட்டும் அப்படியே பிடிச்சி விட்டு அங்கயும் இங்கயும் அப்படியே தடவிக்கிட்டு இருந்தேன்.அதுக்கப்புறம் அவ உடம்பு மேல சும்மா படுத்து இருந்தேன். ரொம்ப நல்லா இருந்திச்சிப்பா. என்னமோ அவளை செய்யனும்னு தோணல.அவளுக்கு அது சலிச்சு போச்சு. "பண்ணுறதுனா, பண்ணு இல்லாட்டி எந்திரி. நேரம் ஆகிட்டு இருக்கு. காசை கொடுங்க. நான் கிளம்பணும்னு" சொல்லிக்கிட்டு எந்திரிச்சா. ரமேஷ் அவகிட்ட "எங்க கிட்ட முப்பது ரூவா தான் இருக்கு. இந்த பத்து ரூவாயை எடுத்துக்க. எங்களுக்கும் ஊருக்குப் போக ஆளுக்கு பத்து ரூவா வேணும்".
அந்த மேட்டர், "ஏங்கடா தேவடியா பயலுகளா நீங்க தானடா இருநூறுனு தரோம்னு சொல்லி ஊர் ஊரா என்னைய அலைய விட்டு எல்லாம் பண்ணிட்டு இப்போ பத்து ரூவானு சொன்னா நான் என்னா இளிச்சவா கிறுக்கியா. மரியாதையா காசு கொடுங்கடானு" சத்தம் போட்டா.
எனக்கு அப்போ எப்படி கோபம் வந்திச்சின்னு தெரியலப்பா. "என்னடி பெரிய இவ மாதிரி பேசிக்கிட்டு இருக்க. அதான் சாப்பாடு வாங்கி போட்டு இருக்கோம்,கொஞ்சம் சரக்கும் குடிச்ச, பஸ்ல ஊர் ஊரா சுத்தி காட்டினோம். ரொம்ப பேசின,இங்கயே போட்டுத் தள்ளி விட்டு போயிடுவோம், இங்க பக்கத்து ஊர் எல்லாம் எனக்கு சொந்தக்காரங்க.அதுனால மரியாதையா நீயே ஓடிப் போயிடுனு" சொல்லிட்டு நாங்க ரெண்டு பேரும் வந்திட்டோம்., அவ எப்படி போனாளோ இல்லையோ என்னானு கூட தெரியல."



இவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. முகம் தெரியாத அந்தப் பெண்ணின் மேல் ஒரு அனுதாபம் பிறந்தது. வசதிக்குறைவு இருந்தாலும் பரவாயில்லை.வசதியான பையன்,நிறைய சொத்து வேற இருக்கு,அவனுக்கு. ஒரு தேவடியாகிட்ட போயிட்டு காசு கொடுக்காம வந்து இருக்கானே என அவன் மேல சொல்ல முடியாத வெறுப்பு வந்தது.


ஒரு டீ குடித்தால் தான் தலைவலி குறையும் எனத் தோன்றியது.

அப்போது அவன் ," என்னடா ராத்திரி வரைக்கும் திண்டுக்கல்ல இருந்திட்டு அப்புறம் ஊருக்கு போகலாமா?" என கேட்டான்.
இவன், "நீ இங்கே இருந்திட்டு வாடா. நான் கோயம்புத்தூர் வரைக்கும் போகிற வேலை இருக்கு. அப்புறம் பார்க்கலாம்" என அவன் பதிலுக்கு கூட காத்து இருக்காமல் ஊருக்கு விரைந்தான்.

Friday, March 11, 2011

அக்காலத்தில்...

டீச்சர்,"பிள்ளைகளா,கிஷோர் கணக்குல நூத்துக்கு நூறு மார்க் வாங்கி இருக்கான்,எல்லாரும் அவனுக்கு கை தட்டுங்க". கிஷோர் மிகவும் சந்தோசமாகப் போயி பேப்பரை வாங்கினான்.

"முரளி, முரளி .. ம்ம். முப்பது மார்க் தான் வாங்கி இருக்க. மாடு மாதிரி வளந்து இருக்கியே, பாஸ் மார்க் கூட வாங்கல. இப்படியே படிச்சா இந்த வருஷம் பெயில் தான். கிஷோர் உன் பக்கத்து வீடு தானா? அவன் எப்படி படிச்சு மார்க் வாங்குறான். அவன் மூத்திரத்தை வாங்கிக் குடி.அப்போயாவது உன் மரமண்டையில ஏறுதானு பார்ப்போம்".

டீச்சர் பேசியதைக் கேட்டதும் கிஷோருக்கு மிகவும் சங்கடமாகப் போயி விட்டது.

முரளி தான் அவனோட பெஸ்ட் பிரண்ட். அவங்க வீட்டுல ஒரே பையன். அளவுக்கும் அதிகப்படியான செல்லம். எப்படினா பத்து வயசு ஆகியும் பால் குடி மாறாப் பையன். இன்னும் அவனுக்கு தாய்ப் பால் கொடுத்து வராங்க. ரொம்ப நேரம் உக்காந்து படிச்சா கண்ணு கேட்டு போகும்னு அவங்க வீட்டுல பயப்படுற ஆளுக. இந்த கருமம் படிப்பு,ஏறித் தொலைய மாட்டேங்குது. அதுக்கு அவன் என்ன பண்ணுவான்,பாவம்.

ஒரு தடவை அவனை டீச்சர் ஸ்கூல் நேரத்துல டீக்கடையில போயி காபி வாங்கி வரச் சொன்னாங்க. அதை கடையில வாங்கப் போகும்போது அவனோட மாமன் பார்த்திட்டு, வீட்டுல சொன்னதுக்குப் அப்புறம் அவனோட அம்மா,சின்னம்மா, அம்மாச்சி எல்லாரும் வந்து பள்ளிக்கூடத்துல வந்து ஆடின ஆட்டத்துல டீச்சர் பேயறைஞ்ச மாதிரி ஆகிட்டாங்க . அதுனால பயலுக, டீச்சர்க என யாரும் அவன்கிட்ட வாய் கொடுக்க மாட்டாங்க.

சாயங்காலம் பள்ளிக்கூடம் முடிஞ்சு வீட்டுக்கு போகும் போது, "டே கிஷோரு, எப்படிடா நீ பஸ்ட் மார்க் வாங்குற, எனக்கும் சொல்லுடா". என்று முரளி கேட்டான்.

"முரளி , நான் தினமும் மூத்திரம் குடிக்கிறேன்டா.அதுனால தான் நான் நல்லா மார்க் வாங்குறேன்".

"உனக்கு யாருடா சொன்னது, இப்படி மூத்திரம் குடிச்சா படிப்பு வரும்னு".

"நம்ம இந்தியாவோட முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், தினமும் குடிப்பாராம்டா. நேத்து நான் பேப்பர்ல படிச்சேன். இன்னிக்கி கூட நம்ம டீச்சர் உன்கிட்ட சொன்னாங்க,பார்த்தியா?" .

பாடத்தை நடத்தும் போது நல்லா புரிஞ்சு படிக்கணும்டா. அப்போ தான்டா நல்லா மார்க் வாங்க முடியும் என்று சொன்னால கேக்கும் ரகமல்ல அவன். ஆகையால் கிண்டலுக்கு இப்படிச் சொல்லி விட்டான்.

சாயங்காலம் ஒரு ஆறு மணி இருக்கும் யாரோ அம்மாவைக் கூப்பிடுவது போல இருந்தது.
"அக்கா, உன் மகன் செஞ்ச காரியத்தை பார்த்தியா? " .
"என்னடா செஞ்ச, கிஷோர்?". வெளியே பார்த்தால் முரளி அம்மா நிக்குது. இவனுக்கு ஒன்றும் புரியவில்லை,அதனால் பதிலே பேசாமல் இருந்தான்.

"முரளி பள்ளிக்கூடம் முடிச்சு வீட்டுக்கு வந்த பின்னாடி அவனுக்கு காபி போட்டு குடிக்க குடுத்தேன்க்கா. அவன் அதை குடிக்க மாட்டேன்னு சொல்லி அவன் கையில வச்சு இருந்த எதையோ எடுத்து குடிக்கிறான். அது என்னடானு கேட்டா, அது அவன் மூத்திரமாம்,அதை குடிச்சா நல்லா படிப்பு வரும்னு கிஷோர் சொன்னான்மா. உனக்காவது இன்னொரு பையன் இருக்கான். நாங்களே ஒண்ணே ,ஒண்ணு கண்ணே கண்ணுனு வளக்கிறோம். உன் மகன் இப்படி கூத்துலாம் பண்ணலாமா?."

இதைக் கேட்ட கிஷோர் அம்மாவுக்கு கோபம் வந்து,விளக்குமாறை தூக்கிக் கொண்டு அடிக்க வருவது தெரிந்தது.

அம்மா வேற வைய்யும்,அடிக்கும் ! முரளி வீட்டு படை வேற அடுத்து வருமோ? யார் கையிலும் சிக்கக் கூடாது. இப்படி கிஷோருக்குப் பயம் அதிகமாகி வீட்டை விட்டு வெளியே ஓடி வரும் வழியில் முரளி அம்மாச்சி கையில் வசமாக அகப்பட்டுக் கொண்டான்.

"எலேய்,கருவாயா! ஏன் பேரனை மூத்திரமா குடிக்க சொன்ன? வா, உன் குஞ்சை அறுத்து காக்காவுக்கு போடுறேன்" என்று சொல்லி முரளி வீட்டுக்கு உள்ளே இழுத்துக் கொண்டே போனது.

"கிஷோர், நீ குடிடா மூத்திரத்தை முதலில்" என்று சொல்லிக் கொண்டே ஒரு டம்ளரைக் எடுத்து வந்தது கிழவி.

'என்னடா,நம்ம சொன்னது நமக்கே வினையாகிடிச்சு' என்று நினைச்சுக்கொண்டே வாங்கினால், அது காபியாக இருந்தது.

'அப்பாடா,தப்பிச்சோம்னு' அதைக் குடிச்சு விட்டு கீழே மூத்திரம் இருந்த டம்ளரை ஒரு எத்து விட்டு இருவரும் வெளியே கிட்டி விளையாட ஓடி விட்டனர்.