Friday, June 10, 2011

தானாய் வீழும் மரம்

நேற்று இந்த வழியில் வண்டியில் சென்றுகொண்டு இருக்கும்போது  நாங்கள் பார்க்க  இந்த மரம் தானாக கீழே வீழ்ந்தது.வழியில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்த கோடாலி கொடுத்து உதவினான் ஒரு நண்பன்.அப்பொழுது "இந்த சத்து பிடிப்பற்ற மரங்களுக்கு கீழே தலைக்கவசம் இல்லாமல் ஒய்வு எடுப்பது கூட ஆபத்தானது" என்று பேசிக்கொண்டு இருந்தோம். தானாய் வீழும் மரமும் கூட மனிதனால் வெட்டப்படாமல் போகாது போல  என்ற எண்ணமும் மனதினில் ஓடிக்கொண்டு இருந்தது.

இன்று காட்டுக்குள் சென்ற அந்த நண்பன் வழிப்பாதைக்காக ஒரு மரத்தை வெட்ட முனைகையில் மற்றொரு மரத்தின் கிளை  முறிந்து தலையில் விழுந்து இறந்து போனான்,தலையைப் பார்க்காமல் வேலையை மட்டும் குறியாக பார்ப்பது தவறு என்ற படிப்பினையும் கொடுத்துக் கொண்டே.

நேற்று கைகொடுத்த கை இன்று இல்லை. 'விதி வலியதோ' என்ற எண்ணம் மேலோங்குகிறது. வாழ்வின் மீதான நம்பிக்கையும்,அவநம்பிக்கையும் ஒரே சேர மனதில் எழும்பி கண்ணீர் மல்கச் செய்கிறது. 

2 comments:

கூடல் பாலா said...

மிகவும் ஒரு நல்ல அறிவுரை

செம்மலர் செல்வன் said...

நன்றி,கூடல் பாலா:)