Friday, June 24, 2011

தீராத கணங்கள்

கால்களுக்கு இடையில் ஏதோ ஒன்று ஊர்வதை தட்டி விடுவதற்காக போர்வையை உதறி விட்டு படுக்கையில் இருந்து எழுந்தான். எலியா,பூச்சியா என்று பகுத்தறிய முடியாத  வஸ்து ஒன்று ஓடியது. அதை கொல்லவோ, அடிக்கவோ மனசில்லை. இதுவரை  நாம் வாழ்வதற்காக எத்தனை உயிர்களை மிதித்துக் கொன்று, ம்ம். என்ன காலையிலே இப்படி ஒரு சிந்தனை. மணி எத்தனை என்று பார்ப்பதற்காக செல்லை எடுத்து பார்த்தால் செல் அணைந்து விட்டு இருந்தது.அதை எடுத்து பிளக்கில் சொருகி விட்டு கதவை திறந்து பார்த்தால் வெளியில் மழை பெய்வதுமாக நேரம் கணிக்க முடியாததாய் இருந்தது.பத்துக்கு நாலு அடி கணக்கில் ஒரு எலிப் பொந்து.இதற்குள் இரண்டு கட்டில்கள் வேறு. கழிப்பதற்கும்,குளிப்பதற்கும் ஒன்று தனியாக ஒடுக்கி விடப்பட்டு இருந்தது. எப்போதும் அவசியப்படாத ஏ.சி. ஓடிக் கொண்டே இருக்கிறது.விட்டு போன தூக்கத்தின் மிச்சம் கவலையை கொடுத்து கொண்டு இருந்தது. உறக்கத்துக்கும்,விழிப்புக்கும் பேதமற்றதாய் இதுபோன்ற கணங்கள் தொடருவதைப் பற்றிய ஏக்கத்தோடு எப்படி,எப்பொழுது வெளியே செல்வது? என்ற கேள்வி மனத்திலே தங்கி இருந்தது. 


குளியலறைக்குள் உள்ளே நுழைந்து கதவை தாழிட்ட இரண்டு நிமிடங்களில் யாரோ கதவை தட்டுவதை போன்ற சத்தம் கேட்டது.பதில் கொடுக்கும் முன்னே ஒரு பெண் உள்ளே நுழைவதை கதவில்  உள்ள  சிறிய  சந்தின்  வழியாக காண முடிந்தது.தான் தற்போது இருக்கும் நிலையில் வெளியே உடனே வர முடியாது.அவளாக போன பின்னால் வெளியே வருவது நல்லது. இவள் அறையை சுத்தம் செய்ய வந்து இருக்கிறாள் என்றால் மற்ற அனைவரும் வேலைக்கு போயி விட்டார்கள்.இந்நேரம் நம்மை எல்லோரும் தேடிக் கொண்டு இருப்பார்களே ! என்ற கவலை சூழ்ந்து கொண்டது. யாருக்கு மூக்கு வேர்த்ததோ செல் ஒலிக்கும் சத்தம் கேட்கிறது. அலுவலகமாகத் தான் இருக்கும்.வேறு  மார்க்கம் இல்லை,துண்டோடு வெளியே வர வேண்டியது தான்.

சிறிது நேரம் கழித்து அவன் அலறும் சத்தம் மட்டுமே கேட்டது:) 

4 comments:

குணசேகரன்... said...

அருமையான காட்சித் தொகுப்பு..

செம்மலர் செல்வன் said...

நன்றி, குணசேகரன்.

அன்புடன் மலிக்கா said...

நன்றாக இருக்கு காட்சிகளின் தொகுப்பு....

செம்மலர் செல்வன் said...

நன்றி,அன்புடன் மலிக்கா ! !