Friday, June 3, 2011

சீமான் - விஜயலட்சுமி > பெண்கள் ஏன் ஆண்களைப் பிடித்து தொங்குகிறார்கள்?


சீமான்-விஜயலட்சுமி விவகாரத்தில் என்ன நடக்கிறது இது சதியா, இல்லை உண்மையா ? என்று விவாதிப்பதே தேவையற்றது என நான் கருதுகிறேன். முதலில் இது அவர்கள் இருவரின் தனிப்பட்ட உறவு நிலை வாழ்க்கை சம்பந்தப்பட்டது.

பொதுவில் ஆணும்,பெண்ணும் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக விரும்பித் தான் காதலிக்கின்றனர். பின்பு ஏதோ சில காரணங்களால் ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் பிரிகின்றனர்,இல்லை யாரோ ஒருவர் விலகத் தொடங்குகிறார் என்று வைத்துக் கொள்ளுவோம்.இதற்காக என்னை நம்பிக்கை மோசம் செய்து விட்டார்கள் என ஆண் மீது பெண்ணோ,பெண் மீது ஆணோ வழக்கு போடுவது சரியான நிலைப்பாடா? காதலிக்கத் தொடங்கும்போது மட்டும் வக்கீல் வைத்துக் கொண்டா காதலிக்கிறீர்கள்? தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு இருந்தால் அதைப் பற்றி வழக்கு தொடுப்பது நியாயம். அதுவும் கூட இன்றைய காலகட்டத்தில் (காதலிக்கும்போது ஏற்படும்) யாரால்,யார் தூண்டப்பட்டது என்று கூட சொல்ல முடியாது. இதில் போய் காதலித்து ஏமாற்றி விட்டான் என்று வழக்கு தொடர ஆரம்பித்தால் நாட்டில் இனியும் எத்தனை பேர் காவல்துறை,நீதிமன்றத்துக்கு செல்வது?

ஆண்கள் இதுமாதிரியான சந்தர்ப்பங்களில் காவல்துறையை நாடுவதில்லை. ஒருக்கால் அவன் அங்கு சென்றாலும் அவனுக்கு இழுக்கும்,அவமானமும் கூடும் என்று அஞ்சி செல்லாமல் இருக்க கூடும். பெண்களுக்கும் இப்படி குற்றச்சாட்டுகளுக்காக காவல் துறை,நீதி மன்றங்ககளை நாடிச் செல்வது அவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்க கூடியது. ஜீவனாம்சத்தை எதிர்பார்த்து நிற்கும் நிலைமையில் பெண்கள் இன்று இல்லை என்று சொல்லலாம். அப்படி இருக்க .வாழ்க்கை முழுவதும் ஒரு துணை,பாதுகாப்பு வேண்டும் என்று நினைத்து வழக்கு போட்டு இவ்வாறு நம்பிக்கைத் துரோகம் செய்யும் ஆண்களை இழுத்து வந்து கல்யாணம் கட்டிக்கொண்டு எப்படி காலத்தை கடத்துவார்கள்? ஏன்,எதற்காக இந்த பெண்கள் இப்படிப்பட்ட ஆண்களைப் பிடித்து தொங்குகிறார்கள்?

3 comments:

Vidiyal said...

yes, your right.....i agree with you Sir.

Vidiyal said...

Yes, I agree with you.

செம்மலர் செல்வன் said...

மிக்க நன்றி,விடியல்:)