Monday, May 2, 2011

பொறியியல் கல்வி - பொறியில் சிக்கிக் கொண்ட எலிகள்


"இன்ஜினியரிங்க விட்டா வேற படிப்பே இல்லையான்னே,எல்லாரும் அதிலேயே சேரச் சொல்றாங்க.எனக்கு பிடிக்கவே இல்லை.இதை படிச்சு சாப்ட்வேர் பீல்டுக்குத் தான் போகணும். என்னைய எதுக்கு பயோலஜி க்ரூப் சேர்த்து விட்டாங்க.கம்ப்யூட்டர் சயன்ஸ் படிச்சு இருந்தாவாது கொஞ்சம் நல்லா இருந்து இருக்கும்." என்று கேட்ட தங்கைக்கு பதில் சொல்ல இயலாமல் சிரித்து மழுப்ப மட்டும் தான் முடிந்தது.

80,90 களில் பொறியியல் படிக்க வேண்டும் என்ற ஆர்வமே எல்லோரிடமும் மேலோங்கி இருக்கும். நுழைவுத் தேர்வு,பொதுத் தேர்வில் 70% விழுக்காடுக்கு மேலே எடுத்தால் தான் கல்லூரிக்கு உள்ளே நுழைய முடியும். கடந்த பத்தாண்டு கால ஆட்சியாளர்களால் இன்று பனிரெண்டாம் வகுப்பில் தேர்வானாலே இடம் கிடைக்கும் என்ற நிலை வந்து விட்டது. அனைவருக்கும் கல்வி கிடைப்பது நல்ல விசயமே. ஆனால் எதார்த்தத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில பொறியியல் கல்லூரிகளைத் தவிர மற்ற கல்லூரிகளின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.பணத்தை புடுங்குவதில் மட்டும் எவரும் குறை வைப்பதில்லை.படிக்கும் பொறியியல் கல்வியும் ஆராய்ச்சிக்கு பயன்படாமல் அன்னிய நாடுகளுக்கு சேவை,உற்பத்தி,மென்பொருள் துறைக்கே பயன்படுகிறது.



இயற்பியல்,வேதியியல,கணிதம் படிப்பவர்கள் முனைவர் பட்டம் பெற்றால் தான் காலத்தை ஓட்ட முடியும் என ஆகி விட்ட காரணத்தால் கலை,அறிவியியல் கல்லூரிகள் காத்தாடுகின்றன. சட்டம் படிப்பவர்கள் செய்யும் கூத்தைக் கண்டு நான் வக்கீல் என்று வெளியில் சொல்ல கூட சிலர் யோசிக்கின்றனர்.மருத்துவம்,விவசாயம் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள் பெருத்த அளவுக்கு பெருகவில்லை.


இனி எல்.கே.ஜி. யில் இருந்து ஆங்கிலம் கற்பது போல் பொறியியல் கல்வியை கூட ஒரு பாடமாக வைத்து விடலாம் என்கிற அளவுக்கு பொறியியல் கல்லூரி மோகம் இன்றைய பெற்றோர்களிடம் இருக்கிறது.

பிழைக்க மட்டுமே கல்வி தேவை என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டு பொறியியல் என்ற பொறியில் சிக்கிக் கொண்ட எலிகளாக நாம் இருக்கிறோம்.

சோறுக்குப் பதிலாக இரும்பை பொரியல் (பொறியியல்) போட்டு திங்கும் காலமும் வரலாம்!

9 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

செம்மலர் செல்வன் said...

மிக்க நன்றி,அய்யா.

raghuvaran said...

Hei tude... Nais bost...!

செம்மலர் செல்வன் said...

ரொம்ப நன்றி,ரகு!

Anonymous said...

Chelvan

It is not enought to describe the problem.

It is necessary to finsih your post with the solution.

What is your solution ?

செம்மலர் செல்வன் said...

@Simakkal, Ungal karuthukku nandri. alavukku meeri peruththu vitta poriyiyal kallorikalaal yerpatta,yerpadum vilaivukalai sutti katti irukkiren. LKG,UKG interview vaikkira intha kalathula Engg. college seat evlo easy a kidaikkudhu? vimanangal,seyarkaikol,anu ulai ena ovvoru tholilnudpadankalukkum nam velinaattin thayavai than naadukirom. Inge Original Engg Manufacturers niruvanangal ethanai irukirathu?Athey neram Germany parungal. ellavatrilum muthanmai. poriyiyal mattum thanithu iyanga mudiyathu. iyarpiyal,vethiyiyal,kanitham ena anaiththirkkum munnurimai kodukka vendum.aaraichchi panikalukku arasaangamum,thaniyaar niruvangalum maanavarkalai ookkuvikka vendum. nammale suyama kandipidichu payanpadutha thodanginal than nam valarchi adaya mudiyum. Europe la konja nilathula niraya saakupadi panranga,inga namma kitta irukkira neer aatharangalai tholaichittu nilaththai plot pottu vikkirom. namma padikkira kalvi,aduthavanuku edupidi clerk velai pakkira mathiri iruku.

செம்மலர் செல்வன் said...

சிம்மக்கல்,நானும் இந்தத் துறையில் சிக்கியுள்ள ஒரு எலி தான்.

Anonymous said...

செம்மறி ஆடுகள் கூட்டம்..திருந்த வெகு நாட்கள் ஆகும்!

செம்மலர் செல்வன் said...

சிவ குமார்,ஒரு பத்து இருபது ஆண்டுகள் இந்த நிலை நீடிக்கலாம்.