Friday, October 28, 2011

துரத்தும் நிழல்கள்

ஒரு இனிமையான மாலை நேரத்தில் ரெஸ்டாரன்ட் ஒன்றில் நீங்களும்,உங்கள் காதலியும் தேநீரை  உறிஞ்சிக் கொண்டு பேசக் கூட தோன்றாமல் வெகு நேரமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். அவளை பார்க்காத இந்த இரண்டு,மூன்று வருடங்களும் போனிலும்,சாட்டிலும் பேசி தீர்த்து விட்டதால் அவளை பார்த்துக்  கொண்டு இருப்பதே பேரானந்தமாக இருந்தது. அந்த நேரத்தில் உங்களுக்கு இடையில் ஒருவன் வந்து "இவ ரொம்ப அழகா இருக்காள்ல" என்று உங்களிடம் கேட்டால் எப்படி இருக்கும்? எனக்கும் அப்படித் தான் கோபம் பொத்துக் கொண்டு வந்து அவனை அடிக்கப் போனேன். ஓங்கிய கையை பிடித்துக் கொண்டு என் காதலியைப் பார்த்து அவன் கேட்டான். "நியாயமா பார்த்தா எனக்கு வர வேண்டிய ஆத்திரம் இவனுக்கு ஏன் வருது,யாருக்குடி நீ பொண்டாட்டி? ". எனக்கு இரண்டு மூஞ்சியையும் நேரில் பார்க்கும் தைரியம் இல்லாமல் போயி என்ன செய்வதென்று விழித்தேன். 


இதன் பிறகு எனக்கு என்ன நேர்ந்தது என்று நீங்கள் மூளையை கசக்குவதை விட அடுத்த நாள் காலை செய்தித் தாள்களில் அவர்கள் இருவரும் இறந்து போனதாய் வந்து இருந்த செய்தியை நீங்கள் படித்து இருக்கலாம். போலீஸ் மட்டுமல்ல ஏன் நீங்களும் கூட குப்புறப்படுத்துக் கொண்டு யோசிக்கலாம். ஏனென்றால் நானும் இப்பொழுது அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறேன். இவன் கனவுகளை காவு கொடுத்தவன் !

No comments: