Wednesday, May 18, 2011

மூளையை மயக்கும் போதையாக Ink Whitener


கடந்த மாதத்தில் ஒரு நாள் "வியாபாரம் எப்படி போகுது ?" என்று பேனா முதலான எழுதுபோருட்களின் விற்பனை முகவராக இருக்கும் நண்பனிடம் கேட்டேன்.

" ஸ்கூல் லீவ் விட்டுட்டாங்க .தேர்தல் நேரமா வேற இருக்கிறதால வியாபாரம் ரொம்ப டல். அதே நேரம் பேனா சேல்ஸ் கம்மியா இருந்தாலும் Whitener சேல்ஸ் குறையல. என்ன காரணம் தெரியுமா? இப்போ சில பசங்க அதுல இருக்கிற liquid (திரவம்) எடுத்து மூக்குல மோந்து பார்த்து போதை ஏறுறதுக்கு வாங்குறாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வடநாட்டு பசங்க தான் வாங்கிட்டு இருந்தாங்க. இப்போ விஷயம் தெரிஞ்சு நிறைய நம்ம பசங்களும் வாங்குறாங்க. ஒரு சில கடைக்காரன் ஏன் எதுக்குன்னு கேட்பான். எல்லாரும் அப்படி நல்லவனா இருப்பான்? வியாபாரம் ஓடினா போதும்னு நினைப்பான். பத்து ரூபாய்க்கு கூட கிடைக்கிறதால எல்லாரும் ஈசியா வாங்கிடுறாங்க. கம்பனிக்காரன் வந்து ஆர்டர் எடுத்திட்டு போறான்,நான் சப்ளை பண்றேன்.எனக்கே சில நேரம் கஷ்டமாத் தான் இருக்கு".


கல்விக்காக மற்றும் சில முக்கிய ஆவணங்களில் பேனாவில் தவறாக எழுதியதை அழிப்பதற்காக பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு பொருளுக்கு அரசு வரிச்சலுகையும் கொடுத்து மக்கள் இதுபோன்ற காரியங்களுக்கு பயன்படுத்தும்போது வேதனையே ஏற்படுகிறது. டாஸ்மாக் மட்டுமே நம் கண் முன் நிற்கும் போதையாக தெரிகிறது. ஆனால் இது வெறும் உடலை மட்டும் பாதிக்காமல் மூளையையும் செயலிழக்க வைக்கிறது.

இந்த பதிவுக்காக தொடர்புடைய படத்தை இணைக்க கூகுளில் தேடும்போது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வந்த செய்தியையும் காண நேர்ந்தது.
http://timesofindia.indiatimes.com/city/chennai/More-city-schoolchildren-get-hooked-to-whiteners/articleshow/7879731.cms(சென்னையில் மட்டும் பள்ளிப்பருவத்தில் உள்ள இருபது பேர்கள் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்)


http://m.timesofindia.com/PDATOI/articleshow/7536840.cms
(கோவையில் 25 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்)


ஜெல் பேனா வந்த பின்னர் நிறைய மாணவர்கள் 'ஜெல்' பேனாவை பயன்படுத்துகிறார்கள். ஆகையால் இந்த கணிப்பொறி காலத்தில் அரசாங்கம் தடை செய்யும் வரை காத்துக் கொண்டு இருக்காமல் பள்ளிகள் தாமாகவே முன்வந்து Whitener பயன்பாட்டை ஒழித்து விட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

2 comments:

Anonymous said...

ஏற்கனவே இது குறித்து சில பத்திரிக்கைகளில் படித்துள்ளேன். ஆபத்தான விஷயம். நிறுத்தப்பட வேண்டும்.

செம்மலர் செல்வன் said...

தங்கள் கருத்துக்கு நன்றி,சிவகுமார்.